கவிதை - இசையின் இம்சை - சரளாதேவி
விடிந்திடும் நாளும்
நகர்ந்திடும் நிமிடமும்
புதுமையாகவே தோணுது உன்னாலே
கல்லான இதயதிலும்
ஈரம் கசிந்துருகும் தன்னாலே
இசையே...அது உன்னாலே
நீ தீண்டிய மனதில்
மனகவலைக்கு இடமில்லை..நொந்துபோன ஒரு தடமுமில்லை
உன்னை ஒரு நொடி நாடினால்
போதுமே..
என் மனம் சிறகடித்திடும் மேலுமே..
செவி வழி நுழைந்து
என் உதடுகள் முணுமுணுத்து
முகபாவங்கள் பொழிந்திடும் இசையே
உன்னால் லேசாக மனம் மாறும் வேறுதிசையே
ஸ்ருதியின் மகளே உன் மடிசாய்வேன்
இருவிழிமூடி இசையோடு இசையாவேன்
தனிமையில் நானும் இசையும்
நள்ளிரவில் பௌர்ணமியும் கடலும்
அமுதும் தேனும் அள்ளி பருகியும்
திகட்டவில்லை தேனே..இசை தேனே
இசையின் இன்ப இம்சையில்…
{kunena_discuss:779}