விழிக்களம் - கிருஷ்ணபாபு
இமை ஓடுகளில்
ஆமையாய் கிடக்கும்
உன் முயல் பார்வைகள்
துள்ளிக் குதித்து வரும்
என் விழிக் களம் கண்டதும்.
சொற்கள் ஈரமாகும் உன் உச்சரிப்பில்.
துவட்டாது அணைத்துக் குளிரும் என் செவிகள்.
காற்றின் சுவை கூட்டிச்
சுற்றிச் சுழலும் உன் குழல்.
சுவாசம் மறந்து அதை
உண்டு மகிழும் என் நாசிகள்.
{kunena_discuss:779}