கவிதை - பிழையா? - ப்ரியசகி
என் கண்கள் உனையன்றி யாரை தேடும்?
என் மனம் உனையன்றி யாரை எண்ணும்?
காணும் இடமெல்லாம் நீ மட்டுமே
நிறைந்திருக்க, வேறொரு ஆண்மகனை
எவ்வாறு என் விழிகள் சந்திக்கும்?
உன்னோடு அக்னி சுற்றி அருந்ததி
பார்க்குமாறு நிதம் நான் காணும்
கனவை, வேறொருவருடன்
நினைவாக்க எப்படி இயலும்?
கணவனாய் உனை நெஞ்சில்
நிறைத்த இதயம் வேறொருவருக்கு
எப்படி இடமளிக்கும்?
என் பெயரோடு வேறொருவர் பெயரை
அழைப்பிதழில் காண நேர்ந்தால், என்
நெஞ்சம் அக்கணமே நொறுங்கி விடாதா?
உனை நினைக்க வைத்த விதி மேல்
பிழையா? இல்லை நீ மறுத்தும் உன் மேல்
நேசம் கொள்ளும் என் மேல் பிழையா?