Rojavai thalattum thendral - Tamil thodarkathai
Rojavai thalattum thendral is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல் இருக்கும் நிலா, வெற்றி - மிருதுளா தம்பதிகளின் அரவணைப்பில் வாழ்கிறாள்.
திடீரென ஒரு நாள் அவளுடைய பழைய வாழ்க்கையின் உறவுகள் அவளை அங்கே கண்டுபிடித்து வருகிறார்கள். அவளுக்கு திருமணமாகி இருப்பது தெரிந்து நிலாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
அவளுடைய 'பழைய' கணவன் தியாகராஜன் அவளிடம் பாராமுகமாக இருக்கவும், நிலா குழம்பிப் போகிறாள். அதுவும் அவனே விரும்பி காதலித்து அவளை மணம் புரிந்தான் என்பது தெரிய வரவும் அவளுடைய குழப்பம் அதிகமாகிறது. என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறாள்.
காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தியாகு ஏன் அப்படி நடந்துக் கொள்கிறான்? நிலாவிற்கு பழைய நினைவுகள் திரும்பியதா? பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா?
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 46 - பிந்து வினோத்
தியாகுவிற்கு அவள் பேசிய விதம் மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது!
அவள் பேச்சின் சாராம்சம் அவனின் விருப்பப் படி இல்லையென்றாலும், அவள் அதை அமர்த்தலாக சொன்ன விதம் தான் அவனின் கருத்தை கவர்ந்தது!
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 47 - பிந்து வினோத்
“இப்படி டையலாக் எல்லாம் பேசிட்டு நான் உன் ஹஸ்பன்ட் அப்படி இப்படின்னு நினைச்சுட்டு ஏதாவது ட்ரை செய்தீங்க, நான் சும்மா இருக்க மாட்டேன்... எனக்கு கராத்தே ஜூடோ எல்லாம் தெரியும்... ஞாபகம் வச்சுக்கோங்க,” என்றாள் பழைய ‘கெத்துடன்’!
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 48 - பிந்து வினோத்
காலையில் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி வந்த கிருத்திகா எதிரே வந்த தியாகுவை கவனிக்காமல் அவன் மீது மோதிக் கொண்டாள்.
அவள் கீழே விழாமல் அவன் பிடித்து நிறுத்த, அவளின் முகமே அவளுள் ஓடிய எண்ணங்களை எடுத்துச் சொன்னது...
Page 4 of 4