தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 46 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“என்னைப் பத்தி உனக்கு தெரியலை! நான் நீ நினைக்குற மாதிரியான பொண்ணு எல்லாம் கிடையாது! என்னை கல்யாணம் செய்துக்கிட்டா உன் வாழ்க்கையில சந்தோஷம்ன்னு ஒன்னு இருக்கவே இருக்காது! இருக்க விடவும் மாட்டேன்!”
கிருத்திகா கத்தியோ, ஆர்ப்பாட்டம் செய்தோ, அதை சொல்லவில்லை! மிகவும் இயல்பாக, முகத்தை அமைதியாக வைத்துக் கொண்டு, மிக மிக அமைதியானக் குரலில் அதை சொன்னாள்!
தியாகுவிற்கு அவள் பேசிய விதம் மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது!
அவள் பேச்சின் சாராம்சம் அவனின் விருப்பப் படி இல்லையென்றாலும், அவள் அதை அமர்த்தலாக சொன்ன விதம் தான் அவனின் கருத்தை கவர்ந்தது!
இவ்வளவு ஈஸியாக, குரலில் கோபம் தெரியாமல், குரலை உயர்த்தாமல் மிரட்ட முடியுமா???
மனதில் ஓடிய கேள்வியின் காரணமாக அவன் முகத்தில் புன்னகை தோன்றவும், அந்த புன்னகையுடன் அமைதியாக எதிரே அமர்ந்திருந்தவளைப் பார்த்தான் தியாகு. அவர்கள் இருவரும் தனியே பேச வழி அமைத்துக் கொடுத்து மற்றவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றிருந்தார்கள்!
தியாகுவையே பார்த்துக் கொண்டிருந்த கிருத்திகாவின் முகத்தில் அவனின் ‘ஸ்மைல்’ எரிச்சலாக பிரதிபலித்தது.
“நான் விளையாட்டுக்கு சொல்லலை, சீரியஸா சொல்றேன். விஜய் கிட்ட கேட்டா, என்னைப் பத்தி சொல்வான்! குரங்கு கையில பூமாலைன்னு சொல்வாங்களே அந்த மாதிரி நீ கஷ்டப் பட வேண்டியது தான்!”
தியாகுவின் புன்னகை விரிந்தது!
“எனக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டாம் கிருத்திகா. எனக்கே ஓரளவுக்கு உன்னை