தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 47 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கிருத்திகா சொன்னதைக் கேட்டு தியாகராஜன் அதிர்ந்து எல்லாம் போகவில்லை.
மாறாக, ‘கூலாக’ அவள் நீட்டிய பத்திரத்தை கையில் வாங்கிப் பார்த்தான்.
அந்த விவாகரத்து பேப்பரில் கையெழுத்து இடும் இரண்டு இடங்களுமே காலியாக இருப்பதை கவனித்தான். அவனுக்கு சிரிப்பு தான் வந்தது! இவளை என்ன செய்யலாம்!
பேச்செல்லாம் படு அமர்க்களமாக தான் இருக்கிறது! ஆனால் அவள் செய்வதை எல்லாம் பார்த்தால் அதற்கு ‘ஆப்போஸிட்’ ஆக தான் தெரிகிறது! அவளுடைய அப்பா சொன்னது தான் அவனுக்கு இப்போது நினைவில் வந்தது! கிருத்திகா நினைத்திருந்தால் இந்த திருமணத்தை ஒரே வினாடியில் நிறுத்தி இருக்கலாம்! அவளுக்கு அவன் மீது காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது என்ற எண்ணம் எல்லாம் அவனுக்கு இல்லை, ஆனால், அவளுக்கு அவன் மீது கொஞ்சோண்டு ‘சாஃப்ட் கார்னர்’ இருக்கிறது என்று தான் அவனுக்கு நம்பிக்கை எழுந்தது!
சரி, அவளை அவள் போக்கிலேயே விட்டு பிடிப்போம் என்று முடிவு செய்துக் கொண்டு கிருத்திகாவை பார்த்த தியாகு,
“ஓகே கீர்த்தி, நீ சொன்னது எல்லாமே அக்சப்டட்,” என்றான் ஈஸியாக!
தியாகு எதிர்பார்த்ததுப் போலவே கிருத்திகாவின் முகத்தில் மிக மெலியதாக ஏமாற்றம் வந்துப் போனதை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது. அதை அடக்கிக் கொண்டு,
“உன்னை ரொம்ப விரும்பி கல்யாணம் செய்திருக்கேன் கீர்த்தி, இந்த நோட்டிஸ் எல்லாம் எப்போவுமே தேவைப் படாது. எப்போ உன் மனசு மாறினாலும் நீ சொல்லு... நான் காத்திருக்கேன்...” என்றான் மென்மையாக!
என்ன தான் ‘மௌன ராகம்’ மோகன் ரேஞ்சிற்கு வசனம் பேசினாலும் கிருத்திகாவின் அழகு தியாகுவையும் தடுமாற தான் வைத்தது. அவளின் முகத்தை விட்டு பார்வையை திருப்பாமலே... திருப்ப முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டு தான் பேசினான்!!!