அவனின் பார்வை அவளுள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஒரே ஒரு வினாடி தடுமாறி விட்டு, உடனேயே தன்னை தானே சமாளித்துக் கொண்டு அவனை பார்த்து முறைத்த கிருத்திகா,
“இப்படி டையலாக் எல்லாம் பேசிட்டு நான் உன் ஹஸ்பன்ட் அப்படி இப்படின்னு நினைச்சுட்டு ஏதாவது ட்ரை செய்தீங்க, நான் சும்மா இருக்க மாட்டேன்... எனக்கு கராத்தே ஜூடோ எல்லாம் தெரியும்... ஞாபகம் வச்சுக்கோங்க,” என்றாள் பழைய ‘கெத்துடன்’!
அவள் சொன்னதைக் கேட்டு இப்போதும் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“ஓகே கீர்த்தி... நீ முறைக்குறதே என் இதயத்தை குத்தி கிழிக்குற மாதிரி தான் இருக்கு... இதுல எக்ஸ்ட்ராவா அடி வாங்குற தெம்பெல்லாம் என் கிட்ட இல்லை. உனக்கே இந்த லைஃப் பிடிக்கும் ஸ்டேஜ் வர வரைக்கும் நான் வெயிட் செய்றேன்...”
கிருத்திகா அவனை ஒரு பார்வை பார்த்தாள்!
முன்பும் அவள் வீட்டில் இதே போல தான் பார்த்தாள்! இதற்கு என்ன அர்த்தம் என தியாகு யோசிக்கும் போதே, கிருத்திகா ஒரு ‘குட் நைட்’ சொல்லி விட்டு கட்டிலின் ஒரு பக்கம் படுத்து தூங்க தயாரானாள்!
அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த தியாகு, சில நிமிடங்களுக்கு பின் அவனும் அதே கட்டிலின் மறு பக்கம் படுத்தான்!
ஒரே அறையில், ஒரே கட்டிலில் அவனுடன் அவனின் கீர்த்தி இருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு ஏகாந்தத்தை கொடுத்தது! ஆனால், அதற்காக அவளை சீண்டி பார்க்கும் ஆசை இப்போது எழவில்லை! அவள் அவனின் அன்பை ஏற்றுக் கொள்ளும் வரை காத்திருக்க விரும்பினான்!
அவள் அவனை ஏற்றுக் கொண்டப் பிறகு அவர்கள் இருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும்???