மனைவியின் மென்மையான பக்கத்தை காட்டிய இந்த அவளின் செயல்கள் அவனுக்கு அவள் மீது இருந்த ஆர்வத்தை இன்னும் அதிகப் படுத்தின. இதேப் போல் அவள் அவனிடமும் மென்மையாக நடந்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்ற கலர் கலர் கனவுகள் வேறு தோன்றி அவனை வெறுப்பேற்றியது!!!
அவ்வப்போது அவனிடம் கத்தினாலும், வேண்டுமென்றே மரியாதை தராமல் நடந்துக் கொண்டாலும் கீர்த்தியிடமும் சின்னது சின்னதாக தெரிந்த காதல் அடையாளங்கள் தான் தொடர்ந்து வந்த நாட்களின் ஸ்பெஷல்!!!
இப்போது நினைக்கும் போது கூட அவனுள் கிளர்ச்சி ஏற்பட்டது...
ஒரு நாள் இரவு உணவை உண்ட படி அவள் ஃபோனில் ஏதோ மீட்டிங்கில் இருக்க, தியாகு அமைதியாக அவளை வழக்கம் போல சைட் அடித்தப் படி உணவைக் கொறித்துக் கொண்டிருந்தான்.
“இங்கே பாருங்க அலெக்ஸ், இந்த மே பீ பேச்செல்லாம் எனக்கு வேண்டாம். ஐ வான்ட் திஸ் டன் பை டுமாரோ.”
ஹம்மாடியோ என்ன ஒரு கம்பீரம் என்று தியாகு தன் மனைவியை ரசிக்கும் போதே, அடுத்த பக்கத்தில் சொன்ன பதிலில் அவளின் முகத்தில் கடுகடுப்பு ஏறியது!
“தட்ஸ் நாட் மை ப்ராப்ளம். உங்களால செய்ய முடியலைனா, வேலையை விட்டுட்டு போங்க... டெட்லைன் மீட் செய்ய முடியாதுன்னு சொல்ற உங்களுக்கு எல்லாம் எதுக்கு இந்த வேலை? எய்தர் டூ இட் டுமாரோ எல்ஸ் யூ ஹாவ் டு ஃபேஸ் மை எஸ்கலேஷன்...”
ஒரு சில நிமிடங்களுக்கு பின் ஃபோனை கட் செய்து கீழே வைத்த கிருத்திகா, ‘ச்சே’ என்று அலுத்துக் கொண்டாள்.
“ஏன் இவ்வளவு கோபம் கீர்த்தி? இவ்வளவு ஸ்ட்ரிக்டா, கோபமா பேசனுமா? உன் மேல