(Reading time: 10 - 19 minutes)

புராஜெக்ட்டுக்காக, பக்கத்திலுள்ள கிராமத்துக்கு அழைச்சிண்டு போறாங்க! சிற்றுண்டி இப்ப சாப்பிட்டுவிட்டு மதிய உணவை கேரியரிலே எடுத்துக்கிறேன், ரெடி பண்ணும்மா! இன்னும் அரைமணியிலே கிளம்பிடுவேன்......." என்று கூறிவிட்டு வாஷ்ரூமுக்குள் நுழைந்தான்.

 ரித்விகா கடிகாரத்தைப் பார்க்கக்கூட நேரமின்றி, சமையலறைக்குள் நுழைந்து பம்பரமாக சுழன்று, சிற்றுண்டி தயாரித்து, டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, மதிய உணவை அவசர அவசரமாக தயாரித்து, கேரியரில் வைத்து, ஒரு கையில் எடுத்துக்கொண்டு, மறுகையால் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தவாறு, மகன் பிருத்வியிடம் தந்தபின், அவனை வழியனுப்பிவிட்டு கடிகாரத்தை பார்த்தாள். மணி ஆறரை!

 இப்போது அவள் கண்களில் தவம் கிடந்த உறக்கம் இருக்குமிடம் தெரியாமல் எங்கேயோ தலை தெறிக்க ஓடிவிட்டது.

 அடுத்த இடைவெளி அல்லது இடைவேளை, ரித்விகாவுக்கு இனி பிற்பகல் இரண்டு மணிக்கு மேல்தான்!

 அதுவரை, கடல் அலைபோல, ஓயாமல், ஒன்று மாற்றி ஒன்று, வேலை இருந்துகொண்டே இருக்கும்.

 நீங்களே பாருங்களேன்!

 " குட் மார்னிங்மா!"

குரல் கொடுத்துவிட்டாள், மகள் குமாரி!

 அவளை தலை சீவி சிங்காரித்து நெற்றியில் பொட்டிட்டு காலை எட்டுமணிக்குள் பள்ளிக்கு அனுப்பியாகவேண்டும்!

 அவளுக்கும் சிற்றுண்டி தயாரித்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு மதிய உணவு கேரியரில் வைத்து அவளிடம் கொடுத்து பள்ளிக்கு அனுப்பினால், அவள் மாலை வீடு திரும்பும்போது, மணி ஐந்துக்குமேல் ஆகிவிடும்!

 எட்டுமணிக்கு மகள் குமாரி கிளம்பும்போது, கணவன் சின்னசாமி குளித்துவிட்டு ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருப்பான்.

 அவனுக்கும் தேவையானதை செய்து கொடுத்து ஆபீஸ் அனுப்பினால், அவன் வீடு திரும்பும்போது, இரவு ஒன்பதுக்குமேல் ஆகிவிடும்.

 ஏனெனில், ஆபீஸ் முடிந்து அவன் மாலையில் பார்ட் டைம் வேலை ஒன்று தினமும் இரண்டரை மணி நேரம் பார்த்துவிட்டு வீடு திரும்ப தாமதமாகிவிடும்.

 அவனுக்கு ஆபீஸில் கிடைக்கிற சம்பளம் குடும்பச் செலவுக்கு ஈடு தர முடியாத நிலையில், வேறுவழியின்றி, அவன் மாலையில் பகுதிநேர வேலை பார்க்கவேண்டிய கட்டாயத்தில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.