“இல்லப்பா....சும்மா..”
“பழச ஏன் ஞாபக படுத்தனும்னு யோசிச்சிட்டியோ...?”
“..............”
“நடந்த எல்லாம் என் ஹப்பிக்கு தெரியும்...சொல்லிட்டேன்...”
“ஓ...ஏதும் ப்ரச்சனை ஆகலையா....?”
“இல்லையே....அவங்களுக்கு அதுல என் மேல மரியாதைதான்னு சொல்வாங்க...இப்பவும் எல்லா விஷயத்திலயும் எப்பவும் என்னை நம்புவாங்க...நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கேன்...”
“கேட்க சந்தோஷமா இருக்குடி..”
“நடந்த எதை நினச்சும் இப்போ எனக்கு வருத்தம் இல்ல. இன்னைக்கு ஒரு விஷயம் இல்லாம என்னால இருக்கவே முடியாதுன்னு அழுற மனசு....நாளைக்கே அது இருந்தா என்னால தாங்கவே முடியாதுன்னும் மாறும்....அதனால இந்த மனசோட உணர்ச்சிகள அடிப்படையா வச்சு எந்த முடிவும் எடுக்க கூடாதுங்கிற முக்கியமான பாடத்தை படிச்சிகிட்டேன். இப்போதான் என் மனசு நான் சொன்னபடி கேட்டுகிட்டு எனக்கு சொந்தமா இருக்குது....”
“நீ எப்பவும் இப்படித்தான் மதி...எல்லா கெட்டதிலயும் நல்லத தேடுறவ.....”
“அதவிடு... பழச நினச்சு எனக்கு வருத்தம் இல்ல....நீ அப்பப்ப பேசு..”
“இல்ல வேண்டாம்...”
ஏன்பா?
“தனிப்பட்டவகையில உன் குணம் எனக்கு ரொம்ப பிடிச்சாலும், அடி மனசுல எனக்கு உன் மேல ஒரு பொறாமை இருந்திருக்குன்னு அப்புறமா தான் புரிஞ்சிது... உன் அழகு, பணம், மார்க்ஸ் இதெல்லாம் எனக்கு கஷ்டமா தெரியல...ஆனா வினோ உனக்கு சொந்தம்னதும்....
ஏன் பெஸ்ட் எல்லாம் உனக்கே கிடைக்குதுன்னு ....ஒரு இனம் புரியாத வலி. எனக்கு மனசுக்குள்ள அந்த வயசில அவன் மேல ஒரு ஈர்ப்பு.... அதனால தான் விலக ஆரம்பிச்சிருக்கேன்...அந்த நாட்கள்ல உன்ட்ட பேசி பழகி இருந்தேன்னா ...நீ தேவை இல்லாம கஷ்ட பட்டிருக்க மாட்டியோன்னு தோணுது...சாரி. “
“ஓ... ஒரு நொடி மௌனம். இட்ஸ் ஓகே மலர்....அதான் எல்லாம் முடிஞ்சாச்சே....ஐ’ம் ஹஅப்பி.... நீ இத முகத்துக்கு நேர சொன்னதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்....அப்பப்ப பேசு....”
“இல்ல மதி...என் மனசு நீ நல்லா இருக்கனும்னு வாழ்த்திகிட்டே தான் இருக்கும்....நீ நல்லா இருந்தா சந்தோஷபடும்....உனக்கு ஒரு கஷ்டம்னா கஷ்ட படும்.....ஆனா...
ஆனா திரும்ப உன்னோட எதையாவது பார்த்து எனக்கு பொறாம வந்துட கூடாது...”
“ஓ.....ஓகே....பை”
உள் மனசில ஒரு சோர்வு. என்னமோ இந்த நொடிதான் எங்க நட்பு செத்துபோனதா ஒரு ஃபீல்.
மதி என்ன மன்னிச்சிருந்தான்னா, மலர் பொறாம எலும்புருக்கியாம்...எலும்புல ப்ராப்ளம் வந்துடும்...அதவிட்டுறுப்பான்னு சொல்லாம ஃபோன வச்சிருக்க மாட்டா.....
மனசு தவிக்குது.
மொபைலில் பீப் சவுண்ட்.
மலர் பொறாம எலும்புருக்கியாம்...எலும்புல ப்ராப்ளம் வந்துடும்...அதவிட்டுறுப்பா... வித் லவ் அண்ட் ப்ரேயர்ஸ்....எஸ்எம்எஸ் வந்திருக்கு.
மனசு லேசாயிட்டு. இனி நாங்க பாக்கவே போறதில்லனாலும் எங்க அன்பு உயிரோட தான் இருக்கும்னு தெரிஞ்சிட்டு.