(Reading time: 12 - 23 minutes)

வீட்டுக்கு வந்தா கைய கால வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டியா…உன்னை யார் இப்ப இங்க வரச் சொன்னது…?” அக்கா முனங்கிக் கிட்டே எல்லா CDயையும்  அடுக்கி வைக்றா

எனக்கு எப்பவுமே அழப் பிடிக்காது. ஆனா கல்யாணத்துக்குப் பிறகு ஏன்னு தெரியலை ஈசியா அழ வந்துடுது. இந்தா இப்பவும் அதத்தான் செய்துட்டு இருக்கேன்…

மௌன சாமியாருக்கு அவர் collectionல இருக்ற books ரொம்ப பிடிக்கும்….தினமும் புக்க பார்க்காரா இல்ல படிக்கத்தான் செய்றாரான்னு இப்பவரை எனக்கு தெளிவா தெரியாது…ஆனா அவர்  புக் விஷயத்துல ஒரு crazy cat…. ஒரு டைம் இவ கை தவறி டேபிள்ள கிடந்த அவர் புக் மேல தண்ணிய கொட்டிட்டா….அப்ப கூட அந்த மௌன சாமியார் வாயத் திறக்கலைனு இப்போ ஏனோ ஞாபகம் வருது…

மொபைல் ரிங் ஆகுது. இந்த தடவை கூப்டுறது யார்னு பார்துட்டுதான் எடுத்தேன்…அவர் தான். என்னதிது எர்த் ரிவர்ஸ்ல சுத்தப்போதா…ஒரே நாள்ல செகண்ட் டைம் கால்….

“நாளைக்கு நான் அங்க வர டிக்கெட் புக் செய்துருக்கேன்….இப்போ எதுவும் flight இல்ல….”

ஏற்கனவே அழுது கொண்டு இருந்ததாலோ என்னமோ  குரலோட சேர்ந்து எனக்கு அழுகையும் வருது.

“அதெல்லாம் வர வேண்டாம்…நீங்க எதுக்கு இங்க….?” அவ்வளவுதான் இணைப்பை துண்டித்துவிட்டார்.

விட்ட இடத்துல இருந்து அழுகையை சிறுது தொடர்ந்துவிட்டு, அக்கா ரூமில் போய் படுத்து தூங்கிவிட்டேன். அவ தான் என் ரூம்ல இருக்காளே.

காலையில் அரை தூக்கத்தில் ஏதோ உணர கஷ்டப் பட்டு கண் விழித்தால் என் நெற்றியில் கை வைத்தபடி மௌன சாமியார்.

 ஏதோ ரொம்பவும் வித்யாசமாய்….என்னதிது? ஓ few days old  தாடி அவர் முகத்துல. இன்னைக்கு வரை அவர் ஷேவ் செய்யாத முகம் எப்டி இருக்கும்னு எனக்கு தெரியாது. நான் இங்க வந்ததுல இருந்தே shave செய்யலையா?

மெல்ல எழுந்து உட்கார்ந்தேன். எப்டி வந்தார் இவர்? என்ட்ட பேசுன நேரத்துக்குப் பிறகு ஃப்ளைட் கிடையாதே இல்ல உண்டோ?

“எப்டி வந்தீங்க?”

“கார்ல தான்…”

“ஆங்…?”

“ நீ அழுதல்ல எனக்கு ஒரு மாதிரி ஆகிட்டு அதான் அப்பவே காரை எடுத்துட்டு கிளம்பிட்டேன்…இப்பதான் ரீச் ஆனேன்…”

பேங்களூர் to தூத்துக்குடி….full night ride…..எதுக்கு?

அம்மா அப்பா அக்கா யார் சொல்லியும் கேட்காமல் அன்னைக்கு மதியமே நான் திரும்பியும் பேங்களூர் கிளம்பியாச்சு.

“வழக்கமா உன்ட்ட பேசுற மாதிரிதான பேசினேன்….அதுக்கா கோவச்சுகிட்டு இப்பவே கிளம்புற ஊருக்கு….இந்தா இந்த CDய வேணா நீயே வச்சுக்கோ…” அக்கா தான்…வழக்கம்போல்.

“சே இல்ல…அவங்களுக்கு லீவு இல்ல….நான் இல்லனா சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவாங்க”

ன்னும் சில மாதங்கள் கடந்திருந்தன.

வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள் ஓவியா. கையில் ஒரு இன்விடேஷன். சித்து வீட்டு function போய்ட்டு அப்டியே அம்மா வீட்ல one week தங்கி நல்லா தூங்கி எந்திரிச்சு வரனும்.

“எனக்கு நீன்னா ரொம்ப precious….my treasure ….ஆனா எனக்கு நான் நினைக்றதை உன்ன மாதிரி verbalize செய்ய தெரியலை….செய்யனும்னு தோணவும் இல்லை just நீ என் பக்கத்துல இருந்தா போதும்…I’m blissed out பட் இனி மனசுக்கு படுறதெல்லாம் உன்ட்ட சொல்றேன் ஓகேவா…” அன்றைக்கு ஊரில் இருந்து கூட்டி வரும்போது அவன் சொன்னது.

அதில இருந்து காலைல 4.30 மணிக்கு அவன் எந்திரிச்ச நேரத்துல இருந்து நான் தூங்கிட்டு இருந்தாலும் அப்பப்ப எதாவது சொல்லி கொஞ்சிட்டுப் போவான்…எப்டியும் தூக்கம் காயப்…காணாம போச்சே தான். பகல்ல தூங்கலாம்னு பார்த்தா

“ இங்க செம stress ah இருக்குது…உன் வாய்ஸையாவது கேட்கலாம்னு கூப்டேன்….”

“எம்டியப் பார்க்கப் போறேன்…இம்பார்ட்டன்ட் மீட்டிங்…..உன்ட்ட ஒரு two words பேசிட்டு போனேன்னா ரிலாக்ஸா ஹேண்டில் செய்வேன்….pray for the meeting”

“டீ சாப்டுட்டு இருக்கேன்…அப்டியே உன்ட்ட பேசலாம்னு கூப்டேன்…”

“ ஒன் மினிட் வாக் வந்தேன்…”

“ இன்னைக்கு இன்டர்வியூ வந்திருந்த ஒரு கேன்டிடேட் நேம் ஓவியா…உன்ட்ட சொல்லனும்னு தோணிச்சு அதான் கூப்டேன்…”

இப்டி எதாவது சொல்லி அப்பப்ப நாள் முழுக்க கால் செய்துட்டே இருப்பான்….ஒவ்வொரு தடவையும் பேசுறது 30 seconds தானாலும் எங்க தூங்க? இதுல lunch க்கு ஒரு lightining visit வேற.

நைட் தூங்குறதுல அவன் குழந்தை தான். டான்னு 10 க்கு flat. காலைல 4.30 க்கு எந்திரிக்றதால அப்டிதான். ஆனா லேட்டா தூங்கி பழகின எனக்கு லேட்டா தான் தூக்கம் வருது.

அவன் introduce செய்துவைத்த chillzee யில் late night ud படிச்சுட்டு தூங்க போனா அவன் காலைல 4.30 ரொமான்டிக் ஹீரோவா எழுப்பிவிட்றுவான்.

இதுல எல்லாமே பிடிச்சிறுக்கு. எதையும் மிஸ் செய்ய இஷ்டம் இல்லை…பட் ப்ரெக்னென்ட் ஆனதும் ரெஸ்ட் தேடுது உடம்பு. so ஒன் வீக் அம்மா வீடு.

அவன் போன்ல பிஸியா இருப்பான்….office ஐடிக்கு மெயில் அனுப்பிட்டா பார்த்ததும் டிக்கெட் புக் செய்துடுவான்.

‘வீட்டுக்குப் போறேன்,  புக் த டிக்கெட்’ அவனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு chilzee ஃபாரம்ல கொஞ்ச நேரம் வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தேன்….”

காலிங் பெல்.

கதவைத் திறந்தால் அவன். முகமெல்லாம் அத்தனை தவிப்பு டென்ஷன்.

பார்த்தவுடன் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“என்னப்பா? என்னாச்சு? வீட்டு வாசல்ல நின்னுகிட்டு?”

“முழுசா உன் expectation அளவுக்கு நான் மாறிருக்கனான்னு தெரியலை…பட் முன்னால விட expressivah தானே இருக்கேன்…பிறகு ஏன் விட்டுட்டுப் போறேன்னு மெசேஜ் செய்துருக்க..ப்ளீஸ் ஓவி போகாத, நீ இல்லாம என்னால ஒரு நாள் கூட முடியாது…”

என் டைபிங் ஸ்கில்லும் கீ போர்டும் சேர்ந்து சதி செய்துருக்குன்னு புரிஞ்சிட்டு.

“சித்து வீட்டு ஃபங்ஷனுக்குப் போகலைனா எனக்கு அருவா பார்சலும்  உங்களுக்கு அஹிம்சை பேச்சும் கிடைக்கும். அதானால ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் மாடி…நெக்‌ஸ்ட் டே ரிடர்ன் டிக்கெட் புக் செய்துடுங்க….”

கையில் அள்ளிக் கொண்டான் மனைவியை. Half day leave எடுத்து வந்திருந்தான் அவன். அதை எப்படி வேஸ்ட் ஆக்குவதாம்?

மீண்டும் ஓவியா தூக்கம் கலைந்து விழிக்கும் போது இரவு 7 மணி. கண்ணை கசக்கிக் கொண்டே அவனைத் தேடி சென்றால் கிட்செனில் எதையோ செய்து கொண்டிருந்தான். டைனிங் டேபிளிலும் சில பாத்திரங்கள் மூடியிடப் பட்டிருந்தன.

“உன் lap ஆன்ல இருந்துது… ஃபாரம்ல நீ chat செய்துறந்ததப் பார்த்தேன்… எனக்கு குக்கிங்ல hands on கிடையாது…ஸ்டில் பொண்ணுங்களுக்கு husband கையால சாப்ட பிடிக்குதுன்னு தெரிஞ்சுது….உங்கம்மாட்ட கேட்டு அவங்க செய்றமாதிரி fish curry வச்சுருக்கேன்….”

சித்த நில்லடி, உன் மனசுல என்ன நினச்சுகிட்டு இருக்க மாப்ளய சமைக்கவிட்டுட்டு அங்க உனக்கென்ன தூக்கம்….அம்மாவிடம் இருந்து கிடைக்கப் போகும் டோஸ் மனதில் ஓடினாலும் சந்தோஷமாக அவன் முதல் cooking experiment அவுட் கம்மை வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டாள் ஓவியா

Flight டிக்கெட் கேட்டேன்

Fish கரி தந்தனை

ஆனா ஒன்னு மந்திகள் தந்தனையா இருந்தாலும் சரி,  fish curry தந்தனையா இருந்தாலும் சரி hidden message என்னனா  Husband னாலே  காது கொஞ்சம் மக்கர் party தான் போல, ஒன்னைக் கேட்டா இன்னொன்னத்தான் தருவாங்க போல….still life is beautifull…..

Tere bina jiya jaye na

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.