புரியாமல் நான் விழிக்க ......அந்த வளையல் என்று அவன் இழுக்க ....மீண்டும் ..நான் முறைக்க ......சரி என்ன வேணுமோ பண்ணிக்க ....என்றபடி புறப்பட்டு விட்டான் டெல்லி நோக்கி .
அந்த ப்ராஜெக்ட், முடிந்து, வேறு ஊரில் வேறு ப்ராஜெக்ட் முடித்து ஒரு வழியாக சென்னை ப்ராஜெக்ட் ஒன்றிற்கு பொறுப்பேற்று என்னுடன் தங்கினான். திருமணமாகி ஆறு மாதம் ஆகி இருந்தது .....காலையில் ஆறு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு புறப்பட்டு விடுவான் .......நள்ளிரவு 1 அல்லது 2 மணிக்கு வீடு வருவான் ........என்ன உண்பான் ? எப்போது தூங்குவான்?... தெரியாது காலை 4.30 மணி போல் என் உச்சந்தலையில் ஒரு முத்தம் விழும், பின் மத்தது நிகழ முதல் மாதத்தில் என்னால் அவனின் பழக்க வழக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை..
...
This story is now available on Chillzee KiMo.
...
சாவியால் அவன் கதவை திறக்க, சத்தியமாக அவன் செய்து கொண்டிருக்கும் கோமாளி தனத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ...உள்ளே சென்ற மறு நிமிடம் என் உடைகளை எடுத்து ஒரு பையில் திணிக்க
என்னப்பா ..............என்ன பண்றீங்க...?
எதுவும் பேசாம என் பின்னால வா...........மிரட்டினான் என்னை.