துடிக்க துடிக்க அவனை நோக்கி ஓடி அணைத்த என்னை, தன் இரு கைகளில் வாங்கினான்….
“ஹேய்….என்னமா…என்னாச்சுடா….?” அவன் அக்கறையாய் பதற…..நான் இன்னுமாய் அழுதபடி அவன் இறுகிய மார்பில் புதைந்தேன்….
என் சின்ன வயதில் என் அம்மாவும் அப்பாவும் இறந்து போன அந்த நிகழ்வு…. அதன் பின் நான் தெருவில் பிச்சை எடுத்த காலங்கள்….அதன் வலிகள் எல்லாம் ஏனோ இன்று என்னை விட்டு கழன்று விழுவதாய் ஒரு உணர்வு…..
“ஏன் என் மெயில்க்கு ரிப்ளை பண்ணலை நீங்க…” கேவினேன்…
“எந்த மெயில்மா…..?சாரி நான் வெக்கேஷன்ல மெயில் பார்க்கமாட்டேன்…அப்டி மிஸ் செய்துட்டேன் போல….”
அப்றமென்ன அவசர அவசரமாய்…. அழகாய் நடந்தது எங்க கல்யாணம்.
அதுக்கு முன்னமே அவன்ட்ட சொல்லிட்டேன்….
“அன்னைக்கு சாப்ட காசு கொடுத்தீங்கல்ல….என் பாஸ்ட்ட குத்திக் காமிக்க பிச்ச போடுறீங்கன்னு நினச்சுட்டேன்….என் ரெசியூம் பார்க்கவும் என் அட்ரெஸை வச்சு நான் எங்க ஹோம் சைல்டுன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்….அங்க எல்லாருமே இப்டி தெருல பெக் பண்ணிட்டு இருந்த குழந்தைங்கதான்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினச்சேன்…
அப்றமா நீங்க பொதுவா எல்லோருக்கும் ஹெல்ப் பண்ற டைப்…அந்த வகையிலதான் எனக்கும் செஞ்சுறுப்பீங்கன்னு எனக்கு புரிஞ்சாலுமே முழுசா அந்த நிகழ்ச்சியவிட்டு எனக்கு வர தெரியலை….”
“ சாரிமா… அன்னைக்கு அந்த மார்னிங் இன்சிடென்ட்ல நீ சாப்டலன்னு ஏனோ தோணிச்சா….இங்க வரவும் உன் ரெஸ்யூம் பார்க்கப்ப ஹோம் நேம் இருந்துச்சு…..அதான் சாப்ட பணம் எடுத்துட்டு வந்திருக்க மாட்டன்னு நினச்சு கொடுத்துட்டேன்….மத்தபடி எதுவும் எனக்கு தெரியாது…. பைதவே….பணத்துக்கு பெக் பண்றவங்க மட்டும் தான் பெக்கர்ஸா…? காசு இல்லாதவங்க மட்டும்தான் ஏழையா…? என் அம்மா அப்பா ரெண்டு பேரும் என்னோட மூனு வயசுல டிவோர்ஸ்…..ரெண்டு பேருக்குமே வேற மேரேஜ் ஆகிட்டு….. நான் அப்ப இருந்து எப்பவும் ஹாஸ்டல்….. ஆரம்பத்துல அன்புக்கு பிச்சை தான் எடுத்தேன்….பட் பின்னால கொடுக்க கத்துகிட்டேன்….சோ என் பாஸ்ட்டும் உன் பாஸ்ட்டும் ஒன்னேதான்…” என்று பதில் வந்தது அவனிடமிருந்து.
மேரேஜ் அன்னைக்கு நைட் திரும்பவும் கேட்டான்.
“ஏய் வாலு என் பேர் என்ன?” என்னை எப்போதும் அடி முடியற்ற பள்ளத்தில் அழகாய் விழத்தள்ளும் அவனது ட்ரேட் மார்க் சிரிப்போடும்….அந்த சிரிப்பை சுமந்து சுருங்கிய கண்களில் குறும்போடும் அவன் கேட்க
அவை அனைத்தையும் முழு விழியிலுமாக ஆசையாக பார்த்தேன்…..
“ஏய் பதில் சொல்லிட்டு சைட் அடிடி”
“போடா…. யாராவது புருஷன் பேர சொல்லுவாங்களா…?...... நான் மாட்டேன்பா….” கண் சிமிட்டினேன்… அதற்கு என்ன பதில் கிடைத்தது அவனிடமிருந்தென நான் சொல்வதற்கில்லை….
{kunena_discuss:785}