(Reading time: 4 - 7 minutes)

'தே பிறவிதான்!

பார்த்தீர்களா?என்னை கொல்ல என்னாலேயே முடியவில்லை!

அப்படின்னா நான் வேறொருவரின் கனவு மனிதன்தானே? இது கனவு ரயில்தானே?'

இப்போது எனக்கும் சுவாரஸ்யம் வந்தது. இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்தபடி கேட்டேன்.

'உங்க வாதத்தின்படி பார்த்தால் நானும் உங்களை போல் ஒருவனா?'

'எனக்குத் தெரியவில்லை! ஆனால் நான் இதுவரை சாக முயற்சித்த முறைகள் ஏராளம். அத்தனையும் தோல்வி! என்றாவது இந்தக் கனவில் அவன் வந்து அவனைக் கொன்றால்தான் எனக்கு நிம்மதி!'

'ஏன்?'

'நான் தூங்கி எவ்வளவு நாளாச்சு தெரியுமா? தூங்க வேண்டும் நிரந்தரமாகவாவது!'

எனக்கே இப்போது ரயிலைவிட்டு குதித்து என் நிஜத் தன்மையை உறுதிசெய்யும் ஆர்வம் வந்துவிட்டது.

த்ரில் கலந்த திகிலுக்கு ஏங்கும் மனது…

'நானும் குதிக்கட்டுமா?' புகையோடு கேள்வியை கசியவிட்டேன்.

'தாராளமாக!ஆனால் நீங்கள் ஒருவேளை இறந்து போனால் நான் பொறுப்பல்ல!'

'அப்படியே பழிசுமத்தி உங்களைத் தூக்கில் தொங்கவிட்டாலும் நீங்கள் வருந்தப் போகிறீர்களா என்ன?'

'அட!நீங்களும் என் போல யோசிக்கிறீர்களே!' புருவம் உயர்த்தினான்.

சிரித்தபடி கதவை திறந்தேன். குதித்ததும் பறவை ஆகிவிடுவேன் என்று கூட தோணியது.

சிகரெட்ட ஒட்ட உறிஞ்சிவிட்டு புகைவிட்டபடி உயரமாய் குதித்தேன்.

மூன்று வினாடி உயரே சென்றவன் ஒரே வினாடியில் கீழே இழுத்தது பூமி.

அந்தக் கடைசி செகண்டின் கடைசி நேனோசெகண்டில் அவனை பார்த்தேன்.

ரப்பர் போன்ற மாஸ்க்கை தன் முகத்திலிருந்து கழட்டினான்...

குரூரப் புன்னகையோடு இருந்த அவன்…அவன்…நானேதான்!

ஏழெட்டு உருளல்களுக்குப் பின் என் உடல் உதறத் தொடங்கியது.

அதன்பின்…

இருள்…இருள்…இருள்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.