(Reading time: 12 - 23 minutes)

ஹேய் நீதான் விலகி விலகி போன….உன் குணத்துக்கு உனக்கு இஷ்டம் இல்லாம நான் மட்டும் லவ் சொன்னனோ பப்ளிக்ல அடி வாங்கின போலீஸ்னு என் பேர்ல வந்திறுக்கும்….. எப்பயாவது தனியா உன்ட்ட பேசுற அளவுக்கு எனக்கு சான்ஸ் கொடுத்றிக்கியா என்ன…? இத்தனைக்கும் பிறகும் கூட ஏன் மேரேஜ போஸ்ட் போன் செய்றன்னு கேட்டேன்….மூஞ்ச தூக்கிட்டு வந்துட்ட….”

“அந்த மூஞ்ச தூக்கினது….அது நீங்களே சீக்கிரம் மேரேஜ் செய்துக்கோன்னு என்னைப் பார்த்து சொல்லவும் வேற யாரையும் செய்ய சொல்றீங்கன்ற மாதிரி தோணிட்டு…..” இவள் விளக்க அவன் முகத்தில் மன்னிப்பு கேட்கும் பாவம்…

“சாரிமா நீ இப்டி யோசிப்பன்னு நான் எதிர் பார்க்கலை…..எனக்கு அப்ப நீ போட்ட கண்டிஷனும் தெரியாது….. அப்போ ஒரு வேளை அது என்னன்னு சொல்லிட மாட்டியான்னு எதிர் பார்த்தேன்….அன்னைக்கு நீ அப்சட்னதும்தான் ஆபத்துக்கு பாவமில்லனு அந்த பொண்னு பார்த்துட்டு போனவன போய் பிடிச்சேன்……அப்றம்தான் அது எப்டிபட்ட கண்டிஷன்னு தெரிஞ்சுது….” அவன் சொல்லிக் கொண்டு போக…..

இவளுக்கு என்ன சொல்லவென தெரியாத நிலை….

“சரி அதவிடு……ஏன் எல்லோரையும் இவ்ளவு சுத்தவிட்ட……என்ட்ட கொஞ்சம் ஒழுங்கா பேசி இருந்தா கூட எப்பவோ நம்ம மேரேஜுக்கு உங்க வீட்ல பேசி இருப்பனே….” அவன் புரியாமல் கேட்டான்.

 “அது நீங்க உங்க சிஸ்டர் மேரேஜுக்கு பிறகு தான் உங்க மேரேஜ பத்தி பார்க்கனும்னு சொல்லிட்டு இருக்கீங்கன்னு யவி அண்ணா யார்ட்டயோ சொல்லிட்டு இருக்றத கேட்டேன்…..இன்னும் உங்க தங்கைக்கு மேரேஜ் ஃபிக்‌ஸ் ஆகலையே…..என் ஏஜ்க்கு இன்னும்  ரெண்டு வருஷம் கூட வெயிட் பண்ணலாம்….அதோட எனக்கு தங்ச்சி இருக்கா அதனால நான் உடனே மேரேஜ் செய்தாதான் அவளுக்கு பார்க்க முடியும்ன்ற மாதிரி எந்த கமிட்மென்டும் எனக்கு கிடையாது….அதான் நீங்க உங்க கமிட்மென்ட்ஸ க்ளியர் செய்ற வரைக்கும் வெயிட் பண்ணலாம்… அடுத்து நிலு வீட்டு வழியா அரேஞ்ச் மேரேஜுக்கு மாதிரி  அப்ரோச் செய்யலாம்னு நினச்சேன்……. “

நிறைவின் புன்னகை அவன் முகத்தில்….. “அது உன்னைப் பார்க்க முன்ன அரேஞ்ச்ட் மேரேஜுக்கு நான் வச்சிறுந்த ப்ளான்….ஆனா காதல் என்ன கேட்டுக்கிட்டா வருது.…பைதவே என் சிஸ்டர் மகிழுக்கும் கல்யாணம் அமஞ்சுட்டு…”

இவள் முகத்தில் இப்போது மகிழ்வின் ஒளி வெள்ளம்….

டுத்து  ரெஜியின் எங்கேஜ்மென்ட்….

“அப்டி என்னடி கண்டிஷன் ? சசி அண்ணாட்ட கேட்டா அவட்டயே கேளுங்கன்னுட்டாங்க… “ கேட்டாள்  வினி.

“அது ரொம்ப ஒன்னும் பெருசு இல்ல…..கால்யாணத்துக்கு ஸ்டேஜ்க்கு நான் புல்லட்லதான் வருவேன்னு சொன்னேன்…..” ரெஜி இயல்பாய் தொடர…

இப்போது புரையேறியது வினிக்கு…

 “அதெப்டி நான் சசிய நினச்சுறுக்கேன்னு நீங்க ரெண்டு பேரும் முடிவுக்கு வந்தீங்க….” என அடுத்த கேள்விக்கு வந்தாள் அவள் இப்போது….

“போடி பெரிய பொல்லாத பொடலங்கா ரகசியம்…….கண்டிஷன் என்னனு கேட்டதுக்கு புல்லட்ட பார்த்தன்னு நிலு சொன்னா…… நானும் போய் உன் புல்லட்ட பார்த்தேன்….அதுல சசின்னு  கிறுக்கி வச்சிறுந்த சின்னதா……உனக்கு தெரிஞ்ச ஒரே சசி அவங்க தானே…..” பவிஷ்யா சொல்ல

“அடபாவிகளா…..அது பக்கத்துவீட்டு பாப்பா வேலை…..அது ஃப்ரெண்ட் பேரு சசி…….” பதறிப் போய் ரெஜி விளக்க……பவி பே என பார்க்க….வாய்விட்டு சிரித்தாள் நிலவினி….

ஒரு கணம் பே எனப் பார்த்தாலும் இப்போது விசிலடித்தபடி பாடினாள் ரெஜி

‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் என் புல்லட்மா…..’

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.