(Reading time: 12 - 24 minutes)

து..”

“டேய், வாயை மூடு, இன்னைக்கி நான் பேசுறேன் நீ கேக்குற.

நீ தானடா, நான் கன்சிவ் ஆகி இருக்குறப்பா..,பைக்ல என்னால ஸ்லோவா போக முடியாது, அதனால கார் வாங்கிடலாம் , அதுவும், ட்வின்ஸ் வேற அப்படின்னு சொன்னா..,இப்ப ப்ளேட்டா மாத்துற..ஸ்...நான் சொல்லுறத நீ கேக்குற..

அப்பறம், என்ன சொன்ன நான், என்னோட பிறநதநாளுக்கு உன்ன துரத்திட்டு,வந்தத சொல்லுற..,ஏன்டா நான் தான் லவ் பண்ணப்பா..,என்னோட பிறந்த நாளுக்கு கூட வெட்கமே இல்லாம உன்கிட்ட நானே கேட்டு விஷ் வாங்கி இருப்பேன்.

அப்பறம் நிறைய விஷயம் நாம லவ் பண்ணபோது இருந்ததுக்கு, இப்ப மாறி இருக்கு..,இல்லன்னு சொல்லுல,டேய் ரெண்டு குழந்தைங்கள சமாளிக்கிறது எவ்வளவு கஷ்டம், அதுவும் ட்வின்ஸ் வேற..,

நீயும் வேலைக்கு போய்டு,களைப்பா வர..,அப்புறம்  என்னை என்ன பண்ணா சொல்லுற...

உனக்கு ஹோட்டல சாப்பிட புடிக்கும்,ஆனா குழந்தைங்களுக்கு அது ஒத்து வரல..

லவ் பண்றப்பா, நமக்கு எந்த கமிட்மண்ட்ஸ்  அவ்வளவுக்கு தெரில,அதனால்

அப்ப இருந்த நமக்கு இப்பொழுது இருக்குற நமக்கும் எவ்வளவோ changes ...,புரிஞ்சுக்கடா,அப்ப நான் எப்படி இருந்தனோ அப்படி தான் இருக்கேன்..”என்று அழுதுக்கொண்டே பேச ஆரம்பித்துவிட்டாள்.

“ஏய்..,என்னடீ..”

“ இல்லடா, நீ என்னை விட்டு பிரிந்து போய்டுவியா, என்னை பிடிக்கலனா என்கிட்ட சொல்லிடு டா..,என்னை விட்டு...”

“ஏய் லூசா நீ..,அப்படியே அறைஞ்சனா ...,வாயைமூடுடீ..” என்று  உச்சக்கட்டக் கோபத்தில் இருந்தான். அவளை விட்டு நகர்ந்து சென்றவன், அவளை இழுத்து அணைத்தான்.

“இல்லடா, நம்ப சிலரோட குணத்தை பார்த்து பிடிச்சிருக்கும், அத சில சூழ்நிலையில் மாத்திக்குற மாதிரி இருக்கும், அப்படி அவங்க மாறப்ப நமக்கு அது ஏமாற்றமா மாறிடுது,அந்த ஏமாற்றம் நமக்கு  வெறுப்பா  மாறிடும்.அதான்..”

“ஏய்..,நீ எப்பொழுதும் எனக்கு பிடிச்ச என்னோட அனுபாமா தான் புரிதா....,நிறைய பேர்  நீ சொல்லுற மாதிரி அந்த ஏமாற்றத்துல விலகிப் போயிடுறாங்க ,அவங்களுக்கு புரிஞ்சுக்க தெரியலடா ,உன்னோட அர்னவ் அது மாதிரியா....”

“அப்பறம் ,எதுக்குடா..,காதலியையும்,மனைவியையும் கம்பேர் பண்ணிப் பார்த்த..,அப்ப உனக்கு..”என்று அவள் முடிக்கும் முன்பே அவனது வாயை மூடினான்  அர்னவ்.

“சாரிடா, நான் உன்னோட இந்த மெச்சுருட்டிய தான் நினைச்சி பார்த்தேன்...,இனிமே யாராவது என்கிட்ட மனைவியா,காதலியானு கேட்டா.

ரெண்டுபேரும் வேணுமுன்னு சொல்லுவேன்..”

“ம்..”

“ஏய், சிரிடா..”

“ம்..,போடா...”

“வா,சாப்பிட்ட போலாம்..” என்று கூப்பிட்டான் அர்னவ்.

“ ஆமா,நான் கூட மறந்துடேன்..,வா போலாம்...,ஏய் இரு..”

“என்னடா ..,பசிக்குது..”

“என்னோட கிப்டா பிரிச்சுப்பாருடா...”

“இப்ப உனக்கு அவசரமா..”

“எனக்கு இல்லடா அவங்களுக்கு..”

“ஆமால..,நான் அவங்கள மறந்துடேன்”

அவள் தந்த கிப்ட்யை பிரித்தான் அர்னவ்.அதில் ஒரு ஆல்பம் இருந்தது.அது அவர்கள் கல்லூரியில் படித்தபொழுது அவர்கள் இணைந்து எடுத்த போட்டோக்கள். இந்த போடோக்கள்  இருந்த, மெமரிகார்டை அவன் தொலைத்து இருந்தான்.

“எப்படிடீ., உனக்கு இது கிடைச்சுது..”

“நான் டெலிவரிக்கு போனப்பா,உன்னோட ஸ்டடி ரூம்ல தேடிக் கண்டுபிடிச்சேன்..”என்று கூறிய தனது மனைவியை அணைத்தான்.

“இந்த போட்டோ அழகா இருக்குல..”என்று அனு காண்பித்த போட்டோவை பார்த்தான் அர்னவ்.

அந்த போட்டோவில் இருந்த இருவர் கண்ணிலும் காதல் நிரம்பி வழிந்தது.

அதுபோலவே, அவர்கள் என்றும் ஒருவருக்கொருவர் இணையில்லா  அன்புடன்  வாழட்டும்.

“ஒரு பெண் ஒரு ஆணின்

மனதில் நுழைந்து,அவனது

உணர்விலும் இருந்து,அவனது

கனவிலும் நுழைந்தாள்

“காதலியாகிறாள்”

ஒரு பெண் ஒரு ஆணின்

மனதை வென்று,அவனது

உணர்வுகளையும் வென்று,அவனது

உறவுகளையும் தனதாக்கி,அவர்களது

உயிரையும் இவ்வுலகிற்கு கொண்டுவந்து

அவனது ஆதி,அந்தமாய் மாறி

“மனைவியாகிறாள்”

எல்லா ஆணின் முதல் காதலியும் அவனது மனைவி ஆவதில்லை

எல்லா மனைவியும் தனது கணவனது முதல் காதலியாக இருப்பதில்லை

ஆனால்,

ஒவ்வொரு  மனைவியும் தனது கணவனின் காதலியாகிறாள்...”

 

This is entry #20 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - காதலியா மனைவியா

எழுத்தாளர் - அனிதா சங்கர்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.