அந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை காலை ஸ்பீடு லாஞ்சில் கிளம்பி பதினைந்து நிமிடத்தில் “குறும்பா “ ரெசார்டை அடைத்தோம். மிகவும் அழகாக இருந்தது. சிறிய தீவு ....... அந்த தீவில் அந்த விடுதி மட்டும் இருந்தது........ தார் சாலையாக இல்லாமல் , வெள்ளை மணல் தரையாக இருந்தது......... நடந்தே அந்த தீவை சுற்றி வர முடிந்தது........ எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையும் கடல் மேலே அமைந்திருந்தது ......... அறைக்குள் நுழைந்தால் ஒரு சதுர கண்ணாடி தரையில் பொருத்தப்பட்டு உள்ளிருந்தே கடலும் சில மீன்களும் தெரிந்தது........
பூலோக சொர்க்கம் என , ஏன் இந்த இடம் அழைக்கப்படுகிறது என நன்றாக புரிந்தது........
கடல் நீரும் மிக தெளிவாக மீன் எல்லாம் நன்றாக தெரியும்படி இருந்தது.........
அதன் பின் காலை சிற்றுண்டி முடித்து , நீரில் விளையாடும் , ஸ்னார்களிங், சென்று ஆழமில்லாத கடலுக்கடியில் உள்ள வண்ணமிகு தாவரங்களை (live corals) கண்டு களித்தோம்.
இரவு உணவிற்கு பின் ,
ஜெய்,”ஸ்நேகா இன்னும் இரண்டு மாதத்தில் ஒரு வருட பயிற்சியாக என்டோஸ்கோபி படிப்புக்காக சென்னைக்கு போகணும், அந்த நேரம் நீயும் உன்னோட நாலாவது வருட எஞ்சினியரிங் படிப்பை முடிக்கலாம்” என்ன சொல்ற? என கேட்ட போது.........
சிநேகாவிற்கு மகிழ்ச்சியில் கண்களில் நீரே வந்து விட்டது........
எனக்காக எவ்வளவு யோசித்து இவ்வளவு ஏற்பாடு செய்த
“என் கணவன் என் தோழனாக “ தெரிந்தார்..........
அதை ஜெய்யிடம் சொன்ன பொழுது,
“நான் அன்று உன்னை பெண் பார்க்க வந்த போதே உன் பெரியப்பாவிடமிருந்து காப்பற்றி உன் நண்பன் ஆகிட்டேன் என்று நினத்தேனே” என்று கண்களில் குறும்பு கூறியதை கேட்டு
“என் கணவன் என் தோழன் “ என அடி மனது வரை இனித்தது..........
This is entry #56 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை -என் கணவன் என் தோழன்
எழுத்தாளர் - பூஜா பாண்டியன்
{kunena_discuss:1083}