ஆனால் இந்த நேரத்திலும் அவனுக்கு உறுதுணையாய் இருப்பது நண்பர்கள் தான்... அவனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததே அவனுடைய நண்பர்கள் தான்... அவன் திரும்ப திருந்தி வரும்வரையும் குடும்பத்துக்கு ஆறுதலாக இருப்பார்கள்...
இருந்தும் குடும்பத் தலைவனாக அவன் இல்லாத அந்த வீடு எப்படி இருக்கும்... இத்தனை நாள் அவன் கொடுத்த கஷ்டத்தால் நிம்மதியை இழந்து இருந்தார்களே அது திரும்ப கிடைக்குமா..?? மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் அவன் மேல் இருந்த பாசம் போய் வெறுப்பு வந்ததே திரும்ப அதெல்லாம் சரியாகும் நிலை எப்போது வரும்...
ஒரு குடும்பத்தை நடத்த பண தேவை அவசியம் தான்... ஆனால் அதையும் தாண்டி அந்த குடும்பம் இன்பமாக வாழ்வது முக்கியம் தானே... இந்த நேரத்திலும் தன் நண்பர்கள் தன் துன்பத்தில் பங்கெடுத்ததில் ஸ்ரீதர் மகிழ்ந்தாலும்... தன்னுடைய தேவை தான் தன் குடும்பத்திற்கு அவசியம் என்பதை ஸ்ரீதர் உணர்ந்தால், கண்டிப்பாக திருந்திய மனிதனாக அந்த மையத்திலிருந்து வெளியே வருவான்.
இந்த நேரத்தில் ஸ்ரீதர் மட்டுமில்லாமல், அந்த நண்பர்களும் யோசிக்க தான் வேண்டும்... இதே இந்த ஸ்ரீதருக்கு வந்த நிலைமை தனக்கும் ஒருநாள் வரலாம் என்று அவர்களும் சிந்தித்தால் கண்டிப்பாக அவர்களும் மது அருந்துவதை நிறுத்திடுவர்...
நண்பனின் துன்பத்தில் தோள் கொடுப்பது மட்டும் நட்பு இல்லை... தன் நண்பனுக்கு துன்பமே ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் நட்பு தான்.
தோழமைகளே முன்பெல்லாம் சோகத்தை போக்க குடிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இப்போது சந்தோஷத்தை பகிர்ந்துக் கொள்ளவே குடிக்கிறார்கள்... எந்த ஒரு விஷேஷம் என்றாலும் மது என்ற ஒன்று இல்லாமல் இருப்பதே இல்லை... என்ன ஒரு நல்ல நட்பு நண்பர்களுக்குள் இருந்தாலும் இப்படி சில பழக்கங்களால் நாம் மட்டுமல்ல, நம் நட்பும் ஆரோக்கியத்தை இழந்துவிடுகிறது.. இது போன்ற பழக்கங்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான நட்பை வளர்ப்போம் .
This is entry #153 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு
எழுத்தாளர் - சித்ரா.வெ.
{kunena_discuss:1083}