2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...! - பிந்து வினோத்
This is (guest) entry #160 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - என் கணவன் என் தோழன்
எழுத்தாளர் - பிந்து வினோத்
கடிகாரத்தில் நேரத்தை பார்த்து விட்டு மனைவியையும், குழந்தைகளையும் எழுப்ப வந்த அஜய், ஒவ்வொரு கோணத்தில் படுத்திருந்த மூன்று பேரையும் பார்த்து புன்னகையுடன் நின்றான்.
இவர்களில் யார் அம்மா, யார் குழந்தைகள் என்று கண்டுபிடிப்பது ரொம்பவே கடினம்! என மனதினுள் நினைத்துக் கொண்டவன், நேரமாகி விட்டதை உணர்ந்துக் கொண்டு,
“ஹேய் பிரீத்ஸ்! எழுந்திரு டைம் ஆச்சு... குட்டீஸ் எழுந்திருங்க... சீக்கிரம்...” என மூவரையும் எழுப்பினான்.
ஐந்து நிமிட போராட்டத்திற்கு பிறகு மூவரும் ஒருவழியாக கண் விழிக்க,
“இன்னைக்கு லஞ்ச்க்கு என் பிரெண்ட் வீட்டுக்கு போகணும்னு சொல்லி இருந்தேனே மறந்துட்டீங்களா? மணி பத்தாக போகுது சீக்கிரம் எழுந்து ரெடி ஆகுங்க...” என்றான்.
“என்ன டாடி ப்ரேக்பாஸ்ட்?” கண்ணை கசக்கிக் கொண்டு கேட்ட பெரியவள் சமிகாவை, கையில் அலேக்காக தூக்கி செல்லம் கொஞ்சியவன்,
“டைம் இல்லை, அதனால சீரியல் தான்... சாப்பிட்டுட்டு ட்வெல்வ் தர்ட்டிக்கு ரெடியா இருக்கனும்...” என்றான்.
“போங்க டாடி சண்டேவும் அதுவுமா, தொல்லை செய்றீங்க...” என்ற கடைக்குட்டி பூமிகாவின் புகாரை கேட்டு,
“ஹோய்...! ஒழுங்கா டைமுக்கு கிளம்பு, இல்லை, டி.வில கார்ட்டூன் போட மாட்டேன்....” என்றான் அஜய்.
“ஹேய் அஜய், இது மாதிரி பசங்களை ப்ரைப் (bribe) செய்யாதீங்ன்னு சொல்லி இருக்கேன்ல?” என்ற அவனின் மனைவி பிரீத்தா,
“பூம்ஸ் பாப்பா, குட் கர்ளா தொல்லை செய்யாமல் ரெடி ஆனால் நீ குட் பாப்பா... நிறைய குட் பாயிண்ட்ஸ் தருவேன் அம்மா...” என்றாள்.
பூமிகா மட்டுமல்லாமல் சமிகாவும் துள்ளி குதித்தாள்.
“எனக்கு தான் பாயின்ட்ஸ்...” என்று இருவரும் துள்ளி குதித்து செல்வதை அமைதியாக பார்த்திருந்தான் அஜய்.
குழந்தைகள் செய்யும் நல்ல விஷயங்கள், குறும்புகள் என இனம் பிரித்து குட் பாயிண்ட்ஸ் & பேட் பாயிண்ட்ஸ் என கொடுத்து அவர்களிடம் நல்ல பழக்கங்களை அதிகரிக்க ஒரு விளையாட்டு போல செய்வது பிரீத்தாவின் வாடிக்கை..
இருவருக்கும் அவரவர் பெறும் பாயிண்ட்ஸ் அடிப்படையில் சர்ப்ரைஸ் பரிசும் உண்டு!
“நீ ஒரு மந்திரவாதி பிரீத்ஸ்... எவ்வளவு ஈசியா பசங்களை வழிக்கு கொண்டு வர” என்றான் அஜய்.
“பசங்களை மட்டும் தானா?” என விழிகளை விரித்து விளையாட்டாக கேட்டு விட்டு சென்றாள் பிரீத்தா.
அஜய்வின் முகத்தில் தானாக புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
திருமணம் முடிந்து பத்து வருடங்கள் ஆக போகிறது என்று நம்பவே அவனுக்கு கடினமாக இருந்தது...
பிரென்ட்ஸ், சினிமா, ஹோட்டல் என ஜாலியாக சுத்திக் கொண்டிருந்தவனை பொறுப்பான குடும்பஸ்தனாக ஆக்கிய பெருமை பிரீத்தாவையே சேரும்.
அவர்களுடையது அன்பான குடும்பம் என்றாலும் traditional குடும்பம் என்று சொல்ல முடியாது... ரொம்பவே unconventinal ஆக ஆனால் கட்டுக்கோப்பாக வாழ்பவர்கள் அவர்கள்.
சிந்தனை கலைந்து பார்ட்டிக்கு செல்ல தயாராக தொடங்கினான்.
தொடர்ந்த மணித்துளிகள் ஒரே கலாட்டாவாக சென்றது. அடித்து பிடித்து எப்படியோ ஒரு மணிக்கு அனைவரும் தயாராகி கிளம்பினார்கள்.
ட்ராபிக் சிக்னலில் கார் நிற்க, அருகே இருந்த மனைவியை ஆராய்வது போல ஒரு பார்வை பார்த்தான் அஜய்.
பின் சீட்டில் அமர்ந்திருந்த குழந்தைகள் இருவரும் தங்களுக்குள் பேச்சில் ஈடுப்பட்டிருப்பதை உறுதி செய்து விட்டு, மனைவியிடம்,
“ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் தான் பிரீத்ஸ், கலை வீட்டுக்கு போறோம்னு சொல்றேன், செயின் எதுவும் போடாமல் வந்திருக்க?” என்றான்.
கிண்டல் தொனியில் அவன் சொல்ல பிரீத்தாவின் வலது கை தானாக கழுத்திற்கு சென்றது... அது காலியாக இருக்கவும், ‘பே’ என ஒரு பார்வை அஜய் பக்கம் பார்த்தாள்...
“என்ன தேடுறீங்க மேடம்? இதா???” என்று காலரை விலக்கி காட்டினான் அஜய்...
பிரீத்தா தேடிய அவளுடைய தாலி சங்கிலி அங்கே அவனின் கழுத்தில் இருந்தது!
“உங்களுக்கு இதே வேலையா போச்சு... செயின் வேணும்னா, வேற ஒன்னு வாங்கிக்க வேண்டியது தானே? எப்போ பாரு என் செயின் மேலேயே உங்களுக்கு கண்ணு... சரி சரி தாங்க...” என்றாள்.
“என்னது தரனும்....??? நோ வே...!!! வீட்டுல கேட்டிருந்தா கூட பரவாயில்லை... இவ்வளவு லேட்டா கேட்குற....! என்ன பொண்ணு நீ....? இவ்வளவு கேர்லசா இருக்கீயே... எங்க அம்மா கிட்ட சொல்றேன் இரு...”
கிடைத்தது வாய்ப்பு என்று அவன் அவளை ஓட்ட, அவனை பார்த்து முறைத்தவள்,
“ஆமாம், இவர் எல்.கே.ஜி’ பேபி எதுவா இருந்தாலும் அப்படியே அம்மா கிட்ட சொல்லுவார்...” என முனுமுனுத்தவள், அவனுக்கு கேட்கும் விதத்தில்,