தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 23 - சாகம்பரி குமார்
அதிதி சொன்ன 'அங்கிள்.' க்ருபா மாமாதானா?. அவர்தான் அதிதி குடும்பத்தின் அவலத்திற்கு காரணமா?. அவர் இறந்து போகவில்லையா?.
கேள்விகள் கண்களில் தெறிக்க அப்பாவை திரும்பி பார்த்தான்.
'பொறுமையாக இரு' என்று அவர் சைகை செய்தார்.
"நீ தப்பு செஞ்சிட்டு அடுத்தவங்க மேல பழி போடாதேம்மா… போம்மா" என்று தலைவர் கடுமையாக பேசி அஞ்சலை மேற்கொண்டு பேசாதவாறு அடக்கி துரத்தினார்.
"எல்லாரும் நாளைக்கு வந்துடுங்க… அதிதி இங இருக்கணும். அஞ்சலை செய்த தப்புக்கு தண்டனையை நாளைக்கு பஞ்சாயத்து முடிவெடுக்கும். இத்தோட ஊர் கூட்டம் கலையுதுன்னு தெரிவிச்சுக்கறோம்" உபதலைவர் சொல்ல சலசலத்தபடி கூட்டம் நடைபெற்றது கலைந்தது.
அதிரதனுடன் கங்காதரன் வீட்டுக்கு சென்றார்.
"அதிதி என்ன செய்கிறாள்?" என்று வினவினார்.
அவளுடைய அறைக் கதவை திறந்து பார்த்த அதிரதன்,
"அசந்து தூங்கிட்டு இருக்கிறாள்" என்று கிசுகிசுத்தான்.
"சரி வாப்பா. நாம ஹாலுக்கு போகலாம்" என்று கங்காதரனும் கிசுகிசுத்தார். ஹாலிற்கு சென்றதும்...
"வெரி கேரிங்… அதிதியின் தூக்கம் கெட்டு விடக் கூடாதுன்னு கவனமாக இருக்கற.. குட்"
"கேரிங்லாம் இல்லை.. அவள் முழிச்சிட்டான்னா நான் செத்தேன்… அவள் அவுட் ஆஃப் ஆர்டரில் இருக்கிறாளா… ஓவரா பர்ஃபாமன்ஸ் செய்றாள். என்னால சமாளிக்க முடியல... "
"ஓ.. பெண்டாட்டி என்ன சொன்னாலும் செய்யணும்பா. "
"ஆங்… பட்டாம் பூச்சியை பிடிக்க சொல்றா… குரங்கு மாதிரி குதிக்க சொல்றா. இந்த சர்கஸ்ல வர்ற கோமாளி மாதிரி ஆடி சிரிக்க வைக்க சொல்றா… எதுக்கு சிரிக்கறீங்க.."
கங்காதரன் வாய் விட்டு சிரிக்க…
"டாடி… உங்க க்ரைம் லிஸ்ட் கூடிகிட்டு போகுது. கேர் ஃபுல்"
"நான் என்னப்பா செஞ்சேன்?."
"உங்கள் ஃபேமிலி ஹிஸ்ட்ரீய சொல்லவே இல்லை. ஓகே… நோ மோர் சீக்ரெட்.. துளசி அத்தை வாழ்க்கை யில் க்ருபா அங்கிள் ரோல் என்ன?"
"நீ நினைப்பதுபோல அவர் மோசமானவர் அல்ல. அடுத்தவர் வாழ்க்கையில் தலையிடுவது பற்றிய லிமிட் தெரியாதவர்."
"ம்.. சொல்லுங்கப்பா.."
"க்ருபா மனசுல ஒரு வெற்றிடம் இருந்தது. அவனுடைய வாழ்க்கை சில உறவுகளை