மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 07 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
டிவியில் இந்தியா தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஓடிக் கொண்டிருந்தது. சுவாரசியமாக சென்றுக் கொண்டிருந்த மேட்சை தென்றல்வாணனும், அபினவும் கதை பேசிக் கொண்டும், பக்கோடா சாப்பிட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அரை மணி நேரம் செல்ல, அவர்கள் முன் வந்தாள் சத்யா. அவள் கையில் ஒரு டிஃபன் பாக்ஸ் இருந்தது.
“ஏங்க, எனக்கு ஒரு வேலை இருக்கு ஒரு மணி நேரத்துல வந்திருவேன். ஷாலினி ஏதாவது கேட்டா கொஞ்சம் எடுத்துக் கொடுங்க,” எனக் கணவனிடம் சொன்னாள் சத்யா.
“சக்தியை பார்க்க தான போற சத்யா? டிஃபன் பாக்ஸ்ல ஏன் சாப்பாடை எடுத்துட்டு போற? ஹாட் பேக்ல வச்சு எடுத்துட்டுப் போய் கொடு. டிபார்ட்மென்ட்ல இருந்திருக்காங்களே, அவங்க லேட்டா தான் சாப்பிடுவாங்க,” என்றான் தென்றல்வாணன்.
கணவனை மெச்சுதலாய் பார்த்தாள் சத்யா. அவள் சக்தியை பார்க்கப் போகிறேன் என்றும் சொல்லவில்லை, சக்திக்கு சாப்பாடு எடுத்துப் போகிறேன் என்றும் சொல்லவில்லை. கையிலிருந்த டிஃபன் பாக்ஸ் பார்த்தே எப்படி கண்டுப்பிடித்து விட்டான்!!!!
ஷெர்லக் ஹோம்ஸ்க்கு அடுத்த சூப்பர் டிடெக்டிவ் அவளுடைய கணவன் தான்!!!!
“சரிங்க! நான் ஹாட் பேக்லேயே எடுத்துட்டுப் போறேன்," என கணவனிடம் சொன்னவள், அபினவ் பக்கம் பார்த்து,
"அபினவ், நான் வரதுக்குள்ளே கிளம்பனும்னு பறக்காத. நான் சீக்கிரம் வந்திடுறேன்,” என்றும் சொன்னாள்.
“சரி மேடம்...க்கா...” என தென்றல்வாணன், சத்யா இருவரையும் பார்த்து விழித்து விட்டு சொன்னான் அபினவ்.
சிரித்து விட்டு, தென்றல்வாணன் சொன்னதுப் போல சக்திக்காக டிபன் பாக்ஸில் வைத்திருந்த