வரையில் நான் சொன்ன எல்லாமே அவக் கிட்ட இருக்கு... பத்து வருஷம் முன்னாடி அவசர அவசரமா நடந்த கல்யாணம் ஒரு வாரத்தில் முடிஞ்சுப் போச்சு! அதுக்காக, அவ வாழ்க்கை அவ்வளவு தான்னு அப்படியே விடனுமா? நீயே யோசிச்சு பார்! உங்க அண்ணன் அஞ்சு வருஷமா டாலர்ல சம்பாத்திக்கிறான்னு தான் பேரு, ஆனால் இப்போ அவன் பாங்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்குன்னு கேளு! ஃப்ரென்ட் வீட்டில கல்யாணம், அவன் படிக்க போகனும், இவனுக்கு வேலை இல்லை, இப்படி இவன் சோஷியல் சர்விஸ் செய்றதோட சரி... இன்னும் ஓன்னு, இரண்டு வருஷத்தில் உனக்கு கல்யாணம் செய்யனும். அதை பொறுப்பா எடுத்து செய்ய வேண்டாமா? ப்ரியாவை பாரு, அஞ்சே வருஷத்தில் அந்த வீட்டில எல்லோரையும் ஓரளவுக்கு லைஃப்பில செட்டில் ஆக்கி வச்சுட்டா... அவளை போல ஒரு பொறுப்பான மருமகள் வந்தா, நான் இவனை பத்தியும் கவலை பட வேண்டாம், உன் வாழ்க்கை பத்தியும் கவலை பட வேண்டாம்...”
வர்ஷா பாசத்துடன் அம்மா தோள் மேல் கைப் போட்டுக் கொண்டாள்!
“ப்ச்... இவ்வளவு தானா அம்மா? என்னை பத்தி நீங்க கவலையே பட வேண்டாம்! நான் படிச்சு முடிச்சு, ஒரு பெரிய ஹாஸ்பிட்டல் கட்டின பிறகு தான் என்னுடைய கல்யாணம் பத்தியே யோசிக்க போறேன்... அண்ணின்னு ஒருத்தங்க வந்து தான் இதை எல்லாம் செய்யனும்னு நாம எதிர்பார்கிறதே சரி கிடையாதும்மா... அண்ணா அவனுக்கு பிடிச்ச மாதிரி அண்ணி செலக்ட் செய்யட்டுமே... அவனை ஃப்ரீயா விடுங்க அம்மா...”
“ப்ரியா நம்ம குடும்பத்துக்கு சரியா இருப்பான்னு தோணிச்சு, அதனால சொன்னேன்... மத்தபடி நான் என்ன உ...”
ராஜம் பேசி முடிக்கும் முன் குறுக்கிட்ட கணபதி,
“ராஜம் போதும் இந்த பேச்சு...! என்று சொல்லி அந்த தலைப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்! அப்படியே விக்கிராந்த் பக்கம் பார்த்து, "விக்கி, உன் கல்யாணம் உன் விருப்பம் போல தான் நடக்கனும்... நீயே உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணா பார்த்து எங்க கிட்ட சொல்லு, நாங்க வந்து பேசுறோம்... ஆன்லைன் வழியா எல்லாம் சரியா இருக்குமான்னு தெரியலை... சென்னையில நல்ல கல்யாண ப்ரோக்கரா பார்த்து, பேசி, உனக்கு பிடிச்ச மாதிரி இருக்க பொண்ணா கண்டுப்பிடி..." என்றார்!