(Reading time: 9 - 18 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

   

வர்ஷாவும், கணபதியும் கிரிக்கெட் மேட்சில் ஆழ்ந்திருந்த நேரத்தில் அவன் மட்டும் அம்மாவை தேடி வந்தான்!

  

துவைத்து காய வைத்திருந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த ராஜமின் அருகில் சென்று அமர்ந்தான்!

   

"என்ன விக்கி, மேட்ச் பார்க்காம இங்கே வந்திருக்க?"

   

ராஜம் இப்போதும் இயல்பாகவே கேட்க, “என் மேல் கோபமா அம்மா?” என மனதில் இருந்த கேள்வியை நேரடியாக கேட்டான் விக்கிராந்த்!

  

“கோபமா, ஏன்?”

  

“நீங்க சொன்னதை நான் கேட்கலைன்னு... கோபம் ஏதாவது...”

  

தயங்கி தயங்கி சொன்னவனின் தலையை பரிவுடன் வருடினாள் ராஜம்!

   

“கோபம் எல்லாம் இல்லை விக்கி... கொஞ்சம் வருத்தம் இருந்தது... ஆனால் உங்க அப்பா சொன்னது மாதிரி நீயா முடிவெடுக்குறது தான் சரின்னு எனக்கும் கூட இப்போ தோணுது... நீயே உனக்கு பிடிச்ச மாதிரி நல்ல பொண்ணா செலெக்ட் செய்து சொல்லு... வர்ஷா ஹவுஸ் சர்ஜனாகி ஒன்பது மாசம் ஆச்சு. இன்னும் மூணு மாசத்தில் அவள் படிப்பும் முடிஞ்சிடும்... நீ சீக்கிரம் செட்டில் ஆனா நாளைக்கு அவளுக்கு அலையன்ஸ் பார்க்கும் போது ஈசியா இருக்கும்...”

  

ராஜமின் பேச்சு உண்மையாகவே இயல்புக்கு திரும்பி இருப்பதை கேட்டு விக்ராந்திற்கு திருப்தியாக இருந்தது... தானாகவே அவனின் கலகலப்பும் பேச்சில் வந்து ஒட்டிக் கொண்டது...

  

“புரியுது மம்ஸ்... நான் செலெக்ட் செய்ற பொண்ணை பார்த்து நீங்க மூக்கு மேல விரலை வச்சு ஆச்சர்யப் பட போறீங்களா இல்லையா பாருங்க...!”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.