“ம்ம்ம்... அப்பா செல்லமா நீ?”
“ஆமாம் ரொம்ப செல்லம்... “
ஆர்த்தி பேசிக் கொண்டிருக்கும் போதே விக்கிராந்தின் மொபைல் ஓசை எழுப்பியது. அழைப்பது யார் என்று எடுத்துப் பார்த்து விட்டு கட் செய்து வைத்தவன்,
“என்னோட அம்மா... நீ சொல்லு...” என்றான் ஆர்த்தியைப் பார்த்து.
ஆர்த்தி மீண்டும் பேச தொடங்கும் முன் மொபைல் மீண்டும் அலறியது.
“இப்போ யாரு?” ஆர்த்தியின் கேள்வியில் எரிச்சல் நிரம்பி வழிந்தது!.
“அம்மா தான்... ஒரு நிமிஷம் இரு...” என்றபடி அழைப்பை ஏற்ற விக்கிராந்த்,
“வீட்டுக்கு வந்தாச்சா அம்மா...” என்றான் ஃபோனில்!
மறுப்பக்கம் இருந்து ஆர்த்திக்கு புரியாத பேச்சு சத்தம் கேட்டது!
“சரி, நான் வெளியே இருக்கேன் ஃப்ளாட்டுக்கு வந்துட்டு கால் செய்யவா?”
மறுப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, “பை...” என்று சொல்லி அழைப்பை துண்டித்து, ஃபோனை மேஜையின் மீது வைத்த விக்கிராந்த்,
“சாரி சொல்லு...” என்றான் ஆர்த்தியிடம்!
“அப்பாடா! அப்படி என்ன அவசரம்? நீ ஃபோன் கட் செஞ்சா ஏதோ முக்கியமான வேலையில் இருக்கன்னு புரிஞ்சுக்க மாட்டாங்களா?”
“அப்படி இல்லை ஆர்த்தி! என் அம்மா, அப்பா, தங்கை மூனு பேரும் ஊரில கோவிலுக்கு