போயிருந்தாங்க... அங்கே மொபைல் சிக்னல் கிடைக்காது... அது தான் வந்த உடனே கூப்பிடுறாங்க...”
“ஓ! நீங்க அம்மா செல்லமா?”
உடனே பதில் சொல்லாது நிதானித்த விக்கிராந்த், ஒன்றிரண்டு வினாடிகள் கழித்து,
“செல்லம்னு சொல்ல முடியாது... ரொம்ப க்ளோஸ்” என்றான்...
அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்தவற்றை சர்வர் எடுத்து வரவும் இருவரும் அமைதியாக இருந்தனர். பார்வையை சுழற்றிய ஆர்த்தி,
“ஓ மை குட்னஸ்...” என்றாள் சற்றே பரபரப்புடன்.
“என்ன ஆச்சு ஆர்த்தி?” என்றான் விக்கிராந்த் புரியாமல்.
“அங்கே ஃப்ரெஞ்ச் பியர்ட் வச்சுட்டு, கிரீன் கலர் ஷர்ட்டில் ஒருத்தன் வரானே, அவன் பேரு பிரதாப்... சரியான இம்சை...”
ஆர்த்தி சொன்ன பக்கம் பார்த்த விக்கிராந்த், அவள் சொன்ன அடையாளம் மூலம் அந்த இளைஞனை கண்டுக் கொண்டான்... பின், திரும்பி ஆர்த்தியிடம்,
“இம்சையா?” என வினவினான்!
“ஆமாம் விக்கிராந்த்... எப்போ பார் வந்து நீ என் உயிர் ஆர்த்தி, ஆர்த்தின்னு சொல்லியே என் உயிரை எடுப்பான்...!”
“ஓ! நான் வேணா மிரட்டவா?”
கேட்டப்படி எழ போன விக்கிராந்தை கை பிடித்து தடுத்தாள் ஆர்த்தி.