தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 04 - சசிரேகா
”தருண்” என போனில் அழைத்தாள் ஹரிணி. அவளின் அழைப்பிற்காகவே காத்திருந்தவன் போல உடனே அவளைத் தேடி வந்தான்
”இங்கதானே இருக்கேன், எதுக்காக போன்ல கூப்பிடற ஹரிணி”
”இல்லை தருண் நீ ஏதாவது வேலையா இருப்பியோன்னுதான்”
”எனக்கு எந்த வேலையும் இல்லை சொல்லு”
”கல்யாண ஷாப்பிங் செய்யனும்ல அதான் எனக்கு இதுல விருப்பமில்லைன்னாலும் உனக்காகத்தான் வரேன்”
”நோ நோ உனக்கு இதுல விருப்பம் இல்லைன்னா வேணாம் ஆனாலும் ஷாப்பிங் போனா உன் மனசு லேசாகும், லாஸ்டா நீ எப்போ ஷாப்பிங் செய்த”
”இளங்கோ இருக்கறப்ப ஷாப்பிங் போனது அதுக்கு அப்புறம் எனக்கு நேரமும் கிடைக்கலை, போகனும்ங்கற ஆசையும் இல்லை”
”அவ்ளோதானா கிளம்பு நாம ஷாப்பிங் போகலாம்”
”ஓகே ஆமா அந்த டெபிட் கார்டு“
”என்கிட்டதான் இருக்கு ஹரிணி வா வா” என அவளை கையுடன் அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்றான்.
துணிக் கடையில் அவனுக்கு பிடித்த உடைகளை தேர்வு செய்ய அவளோ
”சாரி தருண், நான் சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம் இளங்கோவை மறக்க என்னால முடியாது, இளங்கோ இருக்கிற இடத்தில உன்னை வைச்சி பார்க்க ஆசைப்படறேன், அதனால இளங்கோவுக்கு எது பிடிக்குமோ அதை உனக்கு வாங்கித்தரேன் ஓகேவா” என சொல்ல அவன்