தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 07 - சசிரேகா
மறுநாள் விடிகாலையில் ஹரிணி வீட்டில் பக்தி பரவசம் நிலவியது, வீடெங்கும் சாம்பிராணி, ஊதுவத்தி வாசனை பூஜையறையில் விளக்கேற்றி பக்தியாக சாமி பாடல் பாடிக் கொண்டிருந்தாள், அவளை அப்படி கண்டதும் தருணுக்கு ஒருவித சந்தேகம் எழுந்தது
”இவள் வேணும்னே இப்படி நடந்துக்கறாளா இல்லை நமக்கு அப்படி தெரியுதா அவளா நம்மகிட்ட வந்தப்ப நம்மால ஒத்துழைப்பு தரமுடியலை சரின்னு நாமளே அவள்கிட்ட போனா அதுக்குள்ள மாலை போட்டுக்கிட்டு வந்து நிக்கறா, என்னாச்சி இவளாலயும் இளங்கோவை மறக்க முடியலையா அதுக்கு எதுக்கு ஹனிமூன்க்கு கூப்பிட்டா என்னவோ தப்பாயிருக்கு அவள் பூஜை முடிச்சிட்டு வரட்டும் விசாரிக்கிறேன்” என நினைத்தபடியே குளித்து முடித்து ரெடியாகி வந்தான் அதற்குள் அவள் பூஜை முடித்துக் கொண்டு வந்தாள்
”தருண் ரெடியாயிட்டீங்க போல”
”ஆமாம் டிபன் ரெடியா“
”எல்லாம் ரெடி வாங்க சாப்பிடலாம்” என அவனை அழைத்துக் கொண்டு டிபன் சாப்பிட்டு முடித்தாள். அடுத்து ஆபிசுக்கு கிளம்ப வேண்டும்
”தருண் இன்னியில இருந்து நீங்க ஹெச்ஆரா வேலை பார்க்கப் போறீங்க, ஆல்தபெஸ்ட்“
”உனக்கும் ஆல்தபெஸ்ட்“
”எதுக்கு“
”உனக்கும் புது வேலை ஜெஎம்டி ஆகியிருக்க, ம் இனி உன்னை கேட்டுதான் எல்லாரும் நடப்பாங்க”
”எனக்கு கொடுத்த வேலையை நான் சரியா செய்வேன், உங்க வேலையையும் நீங்க சரியா செய்யனும்“