நந்தினியே மெதுவாக
”அத்தான்”
“சொல்லு”
“நான் ஒண்ணு கேட்கலாமா”
“கேளு”
“உங்க மனசுல என்னைப்பத்தி என்ன நினைக்கறீங்க அத்தான்”
“நான் நினைக்கறத சொல்லிட்டா உன்னால தாங்க முடியுமா”
“தாங்குவேன் அத்தான்”
“அப்ப கவனமா கேளு” என சொல்லவும்
அவளும் ம் என தலையாட்டினாள்
”நீ வந்த நாள்ல இருந்து உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ அழகாயிருக்கறதாலயா இல்லை நீ அத்தான்னு கூப்பிடறதாலயா ஏதோ ஒண்ணு ஆனா எனக்கு பிடிக்கும். அதோட நீ அமைதியா இருக்கறது அடக்கமா பேசறது கூட எனக்கு பிடிச்சிருக்கு. நீ அத்தான்னு கூப்பிட்டாலே எனக்கு உன் மேல பாசமும் உரிமையும் தானா வருது.
உன் மேல அதிகமாக உரிமை எடுத்துக்கறது தப்புன்னு நிறைய முறை நான் நினைச்சாலும் என்னால என்னை மாத்திக்க முடியலை. என் வாழ்க்கையில நான் நிறைய பெண்களை பார்த்திருக்கேன் யாருக்கும் என் மனசுல இடம் கொடுத்ததில்லை. உனக்கு என் மனசுல இடம் கொடுத்தேன் ஆனா அதுக்கு என்ன பேர்ன்னுதான் எனக்கு சொல்ல தெரியலை” என அவன்
good epi Sasi.waiting for next epi.thanks & good luck.