ரிஷியை விட்டு ஒதுங்கி காரின் டிரைவர் சீட்டுக்கு சென்று அமர்ந்தான் அர்ஜூன்.
ரிஷியும் காருக்குள் இருந்த நந்தினியிடம்
”நந்தினி என்னை நம்பு உன்னை ஏமாத்த நான் நினைக்கலை. நீ கண்டிப்பா என் வீட்டுக்கு வரனும் நீ வந்தா உன் மனசுல நான் இருக்கேன்னு நம்புவேன் ஒரு நாள் முழுக்க யோசி நல்ல முடிவு எடு உனக்காக நான் காத்திருப்பேன்” என ரிஷி சொல்லும் போதே வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டிக்கொண்டு சென்றான் அர்ஜூன்.
வண்டி மறையும் வரை நின்று அதையே பார்த்தவனுக்கு தன் மீதே கோபம் கோபமாக வந்தது
”சீ பேச நினைச்சி அவளை கூட்டிட்டு போய் தப்பா நடந்துக்கிட்டேன். இப்ப அவள் என்னைப்பத்தி என்ன நினைச்சிருப்பா. என் மேல நம்பிக்கை வைப்பாளா மாட்டாளா இதுல இந்த அர்ஜூன் வேற குழப்பத்தில இருக்கறவளை கூடவே இன்னும் நல்லா குழப்பி வைப்பானே என்ன செய்றது இப்ப பார்க்கலாம் உண்மையிலேயே அவளுக்கு என்னை பிடிச்சிருந்தா அவளே என்னை தேடி வருவா எனக்கு நம்பிக்கையிருக்கு” என தனக்குள்ளே நினைத்துக்கொண்டு தன் காரில் வீட்டை நோக்கி சென்றான்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்.