காதை பொத்திக்கொண்டு அலறினான் அர்ஜூன்
”போதும் போதும் இதுக்கு மேல எதையும் சொல்லாத என்னால் கேட்க முடியலை வா போலாம்” என அவளது கையை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு தன் காரை அடைந்தவன் அதில் அவளை அமரவைத்துவிட்டு கதவை சாத்திவிட்டு திரும்ப ரிஷியும் கூடவே வந்து அவனை அசைய விடாமல் நிப்பாட்டினான்
”இங்க பாரு என்ன நடந்திச்சின்னு முழுசா கேளு நான் முத்தம் கொடுத்தேன் கட்டிபிடிச்சேன் அவ்ளோதான் அதுக்குள்ள நீ வந்துட்ட வேறு எதுவும் நடக்கலை என்னை நம்பு”
“முடியாது வழியை விடுங்க”
“இருடா இருடா இங்க பாரு தப்புதான் நான் பண்ணது தப்புதான் மன்னிச்சிடு அவளை எனக்கு கொடுத்துடு அவள் இல்லாம என்னால வாழ முடியாது” என கெஞ்சலானான் ரிஷி. அதற்கு உடனே அர்ஜூனும் பழைய கேள்வியையே கேட்டுவைத்தான்.
“அப்ப நீங்க அவளை காதலிக்கறீங்களா”
“அதுதான்டா தெரியலை என்னை நம்புடா அவளை அனுப்புடா நான் இப்பவே அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.” என அவன் கெஞ்சவும் அர்ஜூனின் கோபம் தணிந்து
”முடியாதுண்ணா அந்த 3 பொண்ணுங்களும் உங்களை விட்டு போறதுக்காக நீங்க நந்தினிகிட்ட எதை எதையோ செஞ்சி அவள் மனசை கலைக்கப்பார்க்கறீங்க இது தப்பு”
“சத்தியமா இல்லை நான் அந்த நினைப்போட அவள்ட்ட நடந்துக்கலை என்னை நம்பு”
”சரி நாளைக்கு ஒரு நாள் நல்லா யோசிங்க அதுக்கு அடுத்த நாள் காலையில எனக்கு சொல்லுங்க. அதே மாதிரி நந்தினியும் யோசிக்கட்டும் அவளும் முடிவு எடுக்கட்டும் அவள் வந்தா நான் அவளை கூட்டிட்டு உங்க வீட்டுக்கு வரேன் அப்படி அவள் வரலைன்னா அவள் மனசுல நீங்க இல்லைன்னு அர்த்தம் போதுமா இப்ப வழியை விடுங்க” என சொல்லிவிட்டு