முடியும்.”
”மனசு விட்டு பேசறதாயிருந்தா ஓட்டலுக்குதான் வருவீங்களாண்ணா எனக்கு தெரியாம போச்சே” என அவன் இன்னும் கேவலமாக பேசவும் ரிஷிக்கு ஆத்திரம் வர அவன் நந்தினியை பார்த்தான்
”நந்தினி வா என்கூட போலாம் வா இனி இவன்கிட்ட பேசறதே தப்பு”
“அவளை ஏன் கூப்பிடறீங்க அவள் நீங்க கூப்பிட்டா வரமாட்டா”
“இங்க பாருடா தேவையில்லாம பேசாத அவள் எனக்கு வேணும்”
“எப்படி ஒரு நாள் நைட்டுக்கா முடியாது நான் ஒத்துக்கவே மாட்டேன்”
“வேணாம் அர்ஜூன் நான் அவள் மேல ஆசைப்படறேன் அவள்கூட இருக்கவும் ஆசைப்படறேன் ஆனா அது ஒரு நாளுக்காக இல்லை புரிஞ்சிக்க”
“ஓ அப்படியா சரி சொல்லுங்கண்ணா பதில் சொல்லுங்க அவளை நீங்க காதலிக்கறீங்களா”
“நான் அவளை கல்யாணம் செஞ்சிக்கலாம்னு நினைக்கிறேன்” என ரிஷி சொல்லவும் நந்தினி தலை நிமிர்ந்து அவனையும் அர்ஜூனையும் மாறிமாறிப்பார்த்தாள். அவளின் பார்வையை கண்ட அர்ஜூன் அவளை தன் பக்கம் இழுத்துக்கொண்டு ரிஷியிடம் வில்லங்கமாக பேச ஆரம்பித்தான்.
”நான் கேட்டதுக்கு பதில் இது இல்லைண்ணா நீங்க என் தங்கச்சியை லவ் பண்றீங்களான்னு கேட்டேன் காதுல விழலையா”
“நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றேனே அது புரியலையா உனக்கு”
“காதலிக்காம அவளை கல்யாணம் பண்றது எதுக்கு உங்க வீட்ல இருக்கறவங்க வாயை அடைக்கவா”