தாஸ்க்கு
”இப்படியொரு நண்பனுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்” என மனதில் நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டு அவனை கட்டியணைத்துக் கொண்டான். அந்நேரம் மற்றவர்களும் வரவே தாஸ் தேவாவை பார்த்து வா போலாம் என சைகை செய்ய
”எங்க போறது உனக்கு அடுத்து கல்யாணம் வேற இருக்கு, 2 நாள்ல கல்யாணம் சரியா அதுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யனும் ட்ரஸ் வாங்கனும், தாலி வாங்கனும் எவ்ளோ இருக்கு” என சொல்ல தாஸ் நொந்தே போனான். அவனது பார்வை சரண்யாவை தேட அவளோ வேண்டா வெறுப்பாக ஒரு ஓரத்தில் நின்றுக் கொண்டு கோபமாக இருப்பதைக் கண்டவன்
”இவளோட நாம வாழனுமா ம்ஹூம் நம்மோட இவள் வாழ்ந்தே ஆகனும்” என ஒரு முடிவு எடுத்தவன் வண்டியில் ஏறி அமர்ந்ததும் அனைவரும் வைத்தி தாத்தா வீட்டிற்குச் சென்றார்கள்.
அடுத்த வாரத்துடன் இக்கதை முடிந்துவிடும் நன்றி
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...