(Reading time: 27 - 54 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 14 - சசிரேகா

  

தேவநாதன் கட்டும் வீடு மள மளவென வளர்ந்தது. தேவாவும் கீர்த்தனாவும் வீடு கட்டுவதில் இறங்கியதிலிருந்து வீடு மளமளவென வளர்ந்ததோ இல்லையோ அவர்களுக்குள் உண்டான நெருக்கம் பல மடங்கு உயர்ந்தது. தேவாவோ வீடு கட்டி புது வீட்டிற்கு சென்ற பின்புதான் எல்லாம் என கூறியவன் அதை அவனே மீறினான்.

   

”கீர்த்தனா” என தனது பெட்ரூமில் கீர்த்தனா உடன் படுக்கையில் இருந்தான். அவளோ வேண்டுமென்றே பிகு செய்துக் கொண்டே அவனது உள்ளங்கையில் அடைப்பட்டு படுத்திருந்தாள்.

   

“ம்” என முனகினாள் கீர்த்தனா

   

“கீர்த்தி” என ஆசையாக அழைத்துக் கொண்டே அவளது கன்னத்தில் கன்னம் வைத்து தேய்க்க அவளோ 

   

“ம் சொல்லுங்க” என பொய்யாக சலித்துக் கொண்டாள்.

   

“கீர்த்தும்மா” என அவன் ஆசையை விட்டு மோகத்தில் இறங்கி அழைக்கவே அவளுக்கு பயமே வந்தது, சரண்யா வீட்டிற்கு வரும் நேரம் இப்படி இருந்தால் அவள் சும்மாயிருப்பாளா எதுவும் பேசவில்லையானாலும் முகத்தில் கோப அக்னியை கொட்டுவாளே என நினைத்து அவனிடம்

   

”என்ன இது வேலை நேரத்தில கொஞ்சிக்கிட்டு வாங்க போய் வீடு கட்டலாம்”

   

“இருடி தினமும் வீடு கட்டற, இன்னிக்கி ஒரு நாள் என் கூட வீடு கட்டு இங்கயே இரு”

   

“இப்படித்தான் தினமும் என்னை வேலை செய்ய விடாம செய்றீங்க, இந்த லட்சணத்தல எப்ப நம்ம வீடு கட்டி முடிக்கறது. அதுக்குள்ள ஹாஸ்டலே கட்டி முடிஞ்சிடும்”

   

“கட்டிக்கிட்டும் நமக்கென்ன அது என்ன நம்ம ஹாஸ்டலா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.