“சரண்யா வர்ற நேரம் விடுங்க” என எழப் போனவளிடம்
“அவள் வந்தா எனக்கென்ன நீ வா” என அவளை இழுத்து உதட்டில் அழுத்தமாக முத்தம் வைத்த நேரம் வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்கவே அதிர்ந்தாள் கீர்த்தனா
”போச்சி சரண்யா வந்துட்டா இப்ப என்ன செய்றது”
“என்னவா இரு நானே போய் கதவை திறக்கறேன், இதப்பாரு இங்கயே நீ இப்படியே இருக்கனும் புடவையை கட்டின மீதி நீ போட்டிருக்கற ட்ரஸையும் உருவிடுவேன் இப்படியே இரு”
“அய்யோ இப்படியே எப்படி இருக்கறதாம், எனக்கு ஒரு மாதிரியா இருக்கு அதுவும் சரண்யா என்னை இப்படி பார்த்தா அவ்ளோதான்”
“ஏன் என்னவாம் ரெண்டு பேரும் நல்லாதானே இருக்கீங்க”
“மேல் பார்வையில அப்படி தெரியுது. உள்ளுக்குள்ள வேறல்ல ஓடுது”
“ஏன் சரண்யா மறைமுகமா உன்னை ஏதாவது”
என தேவா இழுத்துச் சொல்ல அவள் ஆம் என தலையாட்டவும்
”நினைச்சேன் என்னடா புலி பூனையா அலையுதேன்னு பார்த்தேன். ம் அவள் வெறுப்பை கொட்டினா நான் உன்னை விட்டுடுவேன்னு இப்படி எல்லாம் செய்றாளா வரட்டும் இன்னிக்கு அவள் மனசுல இருக்கறத வெளிய கொண்டு வந்து அவளை உண்டு இல்லைன்னு ஆக்கறேன் நீ இங்கயே இப்படியே இரு எழாத” என சொல்லிவிட்டு அவளை விட்டு விலகி எழுந்து தனது வேட்டியை சரிசெய்துக் கொண்டே வாசல் கதவை அடைந்தான். அதற்குள் சரண்யா பல முறை தட்டோ தட்டென தட்டிக் கொண்டிருந்தாள்.
கதவை திறந்தவன் அவளிடம்