“முடியாது அவளுக்கு செஞ்சா எனக்கும் முத்தம் கொடுங்க” என அவனது கையை பிடித்து இழுக்க அவனோ தடுத்தான்
”நான்தான் சொல்றேன்ல உன்னை வேற வழியில்லாம நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் சரியா எனக்கு கீர்த்தனாவைத்தான் பிடிச்சிருக்கு”
“ஏன் என்னை பிடிக்கலை, நான் அழகாயில்லையா”
“எனக்குத் தேவை அழகில்லை, அன்பு, நிம்மதி, பாசம் அது உன்கிட்ட எனக்கு எப்பவுமே கிடைக்கலை, கீர்த்தனாகிட்ட கிடைக்குது பதிலுக்கு நான் அவளுக்கு என் காதலை கொட்டறேன்” அதற்கு சரண்யா
“என்கிட்டயும் கொட்டுங்க”
“அது என்னால முடியாதும்மா ஏன்னா உன் மேல எனக்கு துளி கூட காதல் வரலை அதான் உண்மை”
“அப்ப எதுக்காக இந்த வீட்ல நாம ஒண்ணா இருக்கோம்“
”நான் உன்னை என்னிக்கோ போக சொல்லிட்டேன், நீயா வம்படிச்சி இங்க தங்கற அப்பா அந்த ஹாஸ்டலுக்காகத்தான் உன்னை பொறுத்துப் போகச் சொன்னாரு, அப்பா பேச்சுக்காக நான் உன்னை பொறுத்துக்கறேன் புரியுதா கிளம்பறியா நல்ல மூட்ல இருக்கேன் அதை நாசமாக்காத எனக்கும் பேர் சொல்ல குழந்தை வேணாமா”
“நான் பெத்துதரேன் ஒண்ணு என்ன 10 குழந்தைகள் நான் தரேன் என்கிட்ட வாங்க” என சரண்யா அவனது கையை பிடித்து இழுக்க அவனுக்கு கோபமே வந்து அவளது கன்னத்தில் அறைந்தான்
”சொல்லிட்டே இருக்கேன் திரும்ப திரும்ப கையை பிடிச்சி இழுக்கற, இதப்பாரு நீயாதான்