சில்லென்ற தென்றல் வீசியது போன்ற உணர்வு தோன்றியது!
அவளுக்கு மெய் சிலிர்த்தது!
செல்ஃபோனை தன் முகம் அருகே வைத்து கரத்தால் அணைத்துக் கொண்டவள், அப்படியே தன்னை மறந்து தூங்கிப் போனாள்!
🌼🌸❀✿🌷
“ப்ரியா! ப்ரியா!"
வாரி சுருட்டி எழுந்த ப்ரியா, எதிரில் நின்ற சாதனாவை அதிர்ந்துப் போய் பார்த்தாள்!
"சாரி! நல்லா தூங்கிட்டீங்க போலருக்கு, மணி ஏழே கால் ஆச்சு! உங்களுக்கு லேட் ஆகுமேன்னு எழுப்பினேன்," என்றாள் சாதனா.
"ஆமாம்! சாரி தூங்கிட்டேன்! தேங்க்ஸ் சாதனா! என் மொபைல்ல அலாரம் அடிக்கலை போலருக்கு!"
"அதெல்லாம் அடிக்க தான் செய்துச்சு, நீங்க அது கூட தெரியாம தூங்கிட்டீங்க! சின்ன பசங்க கரடி பொம்மையை கட்டி பிடிச்சிட்டு துங்குற மாதிரி இதென்ன நீங்க செல்ஃபோனை கட்டிப் பிடிச்சிட்டு தூங்குறீங்க?"
ப்ரியாவிற்கு வெட்கம் தோன்றியது! முகம் மாறாமல் இருக்க அவள் முயல,
"ஆனால் சொல்லியே ஆகனும், இது ரொம்ப கெட்ட பழக்கம் ப்ரியா! செல்ஃபோன் ரேஸ்னால ப்ரெயின் ட்யுமர் வரும்னு சொல்றாங்க!"
"ஓஹோ..."