(Reading time: 7 - 13 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

அவளின் பதில் வாழ்த்துக்கு அவன் காத்திருக்க, அவள் அதை பற்றி பேசாது,

   

"நேத்தைக்கு ஈவ்னிங் ரொம்ப ட்ராஃபிக் இருந்ததா? ரொம்ப லேட்டா மெசேஜ் அனுப்புனீங்க?" எனக் கேட்டாள்!

   

விக்கிராந்தின் கண்கள் மகிழ்ச்சியில் பளபளத்தன!

   

மனதில் இருந்ததை உளறிக் கொட்டி விட்டதை உணர்ந்துக் கொண்டு உதடுகளை கடித்துக் கொண்டாள் ப்ரியா.

   

அவளின் மனநிலையை புரிந்துக் கொண்டவனாக, அமைதியாக அவளின் கேள்விக்கு பதில் சொன்னான் விக்கிராந்த்

   

"நிறைய வேலை பென்டிங்குல இருந்தது ப்ரியா! வீட்டுக்கு போன உடனே வேலையை ஆரம்பிச்சுட்டேன்! சாரி, அதனால தான் மெசேஜ் அனுப்ப லேட்டாச்சு!"

   

அத்தனை வேலையை விட்டுவிட்டு அவளுக்காக வேலை மெனக்கெட்டு எவ்வளவு தூரம் வந்திருக்கிறான்!

   

முன் தின மாலையில் அவளின் ஆட்டோவை வேறு பின் தொடர்ந்து வந்து விட்டு தானே சென்றான்...

   

அவளின் மனதினுள் பரவசம் ஏற்பட்டது.

   

"ஆஃபிஸுக்கு லேட் ஆகுது ப்ரியா! ஒரு குட் மார்னிங் சொன்னால் நான் கிளம்பிடுவேன்."

   

எந்த வித அவசர பரபரப்பும் இல்லாமல் அவன் சொன்ன விதம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தானாக சின்ன புன்னகை இதழ்களில் தோன்ற,

   

"குட் மார்னிங்!" என்றாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.