தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 08 - சசிரேகா
மறுநாள் காலையில் என்றும் இல்லாத உற்சாகத்துடன் ஆபீசுக்கு கிளம்ப ரெடியாகி வந்தான் ஆனந்த். அவனது அலங்காரத்தைக் கண்டு ஆனந்தியே மெச்சி அவனுக்கு திருஷ்டி கழித்தாள் நடப்பதை பார்த்தபடி மெதுவாக வந்த வெங்கியோ
”புது மாப்பிள்ளை போல ஜோரா ரெடியாகி எங்க கிளம்பிட்ட”
”மாமா ஆபீசுக்கு போகலாம்னுதான்”
”உன்னைப் பார்த்தா அப்படி தெரியலையே” என்றான் சந்தேகமாக ஆனந்தோ தன் அக்காவை பாவமாக பார்க்க அதற்கு ஆனந்தி தன் கணவரிடம்
”ஏங்க அவனை எதுக்கு இப்படி நிக்க வைச்சி ஆயிரம் கேள்வி கேட்கறீங்க, அவன் நல்லாயிருந்தா உங்களுக்கு பொறுக்காதே”
”அதுக்கில்லை ஆனந்தி தினமும் இப்படியிருந்தா பரவாயில்லை இன்னிக்கு மட்டும் அசத்தலா வந்து நிக்கறானே அதான் யோசனையா இருக்கு”
”ஆமா அதுக்குன்னு உங்களை போலவா ரசனையே இல்லாம உடை உடுத்துவாங்க அவனாவது நல்லபடியா வரட்டுமே என்ன இப்ப”
”ஏய் என்ன நீ எனக்கு ரசனை இல்லைன்னுட்ட, எந்தந்த இடத்துக்கு போறோமோ அந்தந்த இடத்துக்கு ஏத்த மாதிரி உடை உடுத்துவேன் தெரியும்ல”
”போதும் உங்க புராணம் யார் கேட்கறா இங்க வாங்க சாப்பிடுவீங்க” என சொல்லிவிட்டு ஆனந்தைப் பார்க்க அவனோ அதற்குள் முக்கால்வாசி டிபன் சாப்பிட்டு முடித்திருக்க
”எதுக்கு இப்படி அரக்க பரக்க சாப்பிடற பொறுமையா சாப்பிடு ஆபீஸ் என்ன ஓடியா போகப் போகுது”
”அதுக்காக முதலாளி நாமளே பொறுப்பில்லாம இருக்க முடியுமா என்ன சீக்கிரம் மாமா