(Reading time: 26 - 51 minutes)

ன்று முழுவதும் இருவருமே சோகமாக தான் இருந்தார்கள்.

அன்று வீட்டிற்கு வந்த தேன்மொழிக்கு மனது சரியாகவே இல்லை. ஏதோ மனதை போட்டு பிசைந்தது.

அவள் அன்னை ‘என்ன என்னவென்று’ கேட்டதற்கு தலை வலி ‘எனக்கு சாப்பாடு எல்லாம் வேண்டாம்’ என்று சொல்லி விட்டு அவளறைக்கு சென்று விட்டாள்.

எவ்வளவு முயன்றும் மனம் வேறு சிந்தனைக்கு செல்ல மறுத்தது.

அவள் மொபைலை எடுத்து அந்த நம்பருக்கு போன் செய்தாள்.

“நான் தேன்மொழி பேசறேன்”

“தெரியுது. சொல்லுங்க. நல்லா இருக்கீங்களா. அங்க எல்லாம் செட் ஆகிடுச்சா”

“ம்ம்ம். நிலா காதுல போனை வைக்கறீங்களா”

“ஓகே. ஒரு நிமிஷம் அப்படியே லைன்ல இருங்க. அவ எங்கன்னு பார்க்கறேன். ஒரு விஷயம் தெரியுமா. இப்ப எல்லாம் ஒவ்வொரு வார்த்தை பேசறா”

“அப்படியா” என்றவளுக்கு அதை தன்னால் பார்க்க இயலவில்லையே என்று கஷ்டமாக இருந்தது.

“இதோ இருக்கா. இருங்க. அவ காதுல வைக்கறேன்”

“இதோ பாரு நிலா. போன்ல பேசு. ஹலோ சொல்லு” என்று சொல்லிக் கொண்டே அந்த குழந்தையின் காதில் போன் வைக்கப் பட்டது.

“ஹலோ நிலா குட்டி”

“ஹன் ஹான்” என்ற பேச்சு தான் கேட்டது.

‘ஹலோ சொல்லும்மா’ என்று அங்கு சொல்லிக் கொடுத்தார்கள்.

“ஹலோ” என்று தட்டு தடுமாறி கூறினாள்.

“அம்மா பேசறேன் டா செல்லம். அம்மான்னு சொல்லு டா” என்றாள் தேன்மொழி.    

தொடரும்!

Episode # 03

Episode # 05

{kunena_discuss:727}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.