(Reading time: 38 - 76 minutes)

 

" துக்காக அந்த பெண்ணை உடனே நான் ஏத்துக்கறதும் முடியாத  காரியம்தான் ஒத்துக்குறேன்... ஆனா சுபி இல்லாம நான் படுற வேதனையை அந்த பெண்ணுக்கு நான் தாராமல் இருக்கலாமே "

" புரியல "

" நம்ம லைப் ல இருக்குற  வலியை நாம ஏன் இன்னொருத்தருக்கு தரனும் ஜானு ? நமக்கு புடிச்சவங்க நம்மளோடு இல்லை  என்பது எவ்வளோ பெரிய வலி ... எவ்வளோ கொடுமை ? நமக்காவது அந்த கொடுமை விதியினால நடந்தது ...ஆனா இப்போ நாம ithu வலிக்கும்னு தெரிஞ்சே அதே வலியை இன்னொருத்தருக்கு தரலாமா ? "

( இதுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் ? மாமா சொல்றதும் நிஜம்தானே ? ராம் இல்லாம எனக்கு எப்படி வலியோ அதே மாதிரி தானே ரகுவுக்கும் வலிக்கும் ...  பேசாம நான் ரகு கண்காணா தூரம் போனா என்ன ? )

" நீங்க அந்த பெண்ணை விட்டு விலகி போலாமே மாமா ? தூரமா போன அவ மனசு மாறலாம் இல்லையா ? "

"சான்ஸ் ஏ இல்ல ... விளையாடுறியா ஜானு ? கண்ணில் தெரியாதது கருத்தில் படாது என்பது எல்லாம் காதலுக்கு சரி வராது... உள்ளத்தின் காதலுக்கு உருவம் அவசியமே இல்ல... நம்ம மேல அவங்க வெச்ச காதல் உண்மைனா உலகத்துல எந்த மூலையில் நம்ம இருந்தாலும் அவங்க காதல் மாறாது "

( இதேதான் அன்னைக்கு ரகுவும் கேட்டார் ... இல்லாத ஸ்ரீராமை நீ நினைக்கும்போது இருக்குற அந்த பொண்ணை ...அதாவது என்னை அவனாலே நெனச்சிட்டு வாழ முடியாதான்னு ....)

" அப்போ என்ன பண்ணுவிங்க மாமா ? "

" பேசுவேன் ஜானகி தெளிவா பேசுவேன் ... மனசு விட்டு பேசுவேன்.. இல்லன்னா என் மனசு அந்த பெண்ணை என்னைக்கு ஏத்துக்க முடியும்னு தோணுதோ அதுவரை டைம் கேப்பேன் .. நிச்சயம் ஒதுங்கி நின்னு கஸ்டபடுத்த மாட்டேன் ... காதலுக்குள்ளும் நட்பு இருக்கு ஜானு ... என்னால காதலை தர முடியலைன்னாலும் என் நட்பை தருவேன் ... நான் அவளோடு இருக்கேன் என்பதே நிச்சயம் அவளுக்கு போதுமானதாக இருக்கும் .. அதே நேரம் நான் அவ மனசை கஷ்டப்படுத்தலன்னு நிம்மதியா பீல் பண்ணுவேன் ... காலம் எல்லாத்தையும் மாற்றும் ... என் மனசை அது மாத்தலாம்... அல்லது அந்த பெண்ணுக்கு  என் மனம் மாறாவே மாறதுன்னு தெரிஞ்சு போயி அவளே  அவளின் முடிவை மாற்றிகொள்ளலாம் "

அர்ஜுன் எதிர்பாத்தது போல அவன் சொன்ன கடைசி வாக்கியம் ஜானகிக்கு  சரி என்று பட்டது ....

( ரைட்தான் ... என் மனசு மாறாது என்பதை ரகு புரிஞ்சுகிட்டா அவர் மனசு மாறலாம் இல்லையா ? )

" இந்த விலகி போறது, எதையோ  பறிகொடுத்த மாதிரி இருக்குறது , முகத்தில் அறைஞ்ச மாதிரி அவாய்ட் பண்றது  இதெல்லாம் அவசியமே இல்ல ஜானகி ...  நம்ம உணர்வுக்கு மத்தவங்க எப்படி மதிப்பு கொடுக்கணும்னு நாம எதிர்பார்க்கிறோமோ அதே மாதிரிதான் மத்தவங்களின் உணர்வும் ... இதயத்தின் காயப்படுத்துறது தப்பும்மா "

"..........."

" என்ன ஜானு "

" ஒன்னுல மாமா ... நாம மதியம் சுபியை பார்க்க போகலாம் ... நான் கொஞ்ச நேரம் தூங்கவா ? "

" சரி நீ தூங்கு ..அதுக்கு அப்பறம் நான் போறேன் "

( எங்கே அவள் தப்பான முடிவு எடுத்துவிடுவாளோ என்ற சந்தேகம் அவனுக்கு .... )

" அப்போ நீங்க பாட்டு பாடுங்க "

" ஏய் நீயா பாட சொல்றது நம்பவே முடியலை "

" இல்ல அந்த கொடுமையை கேட்ட லைப் ல எந்த கொடுமையையும் நான் தாங்கிடுவேன் " என்று கண் சிமிட்டினாள் ஜானகி ...

" வாயை மூடிட்டு தூங்குடி .. பட்ட பகலில் தூங்குறதும் இல்லாம உனக்கு பாட்டு வேற கேக்குதா ? சரி சரி மொறைக்காத பாடுறேன் தூங்கு "

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே ....

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே

 வீண் சோகம் ஏனடி மானே ஏனடி

முல்லை மலரே முல்லை மலரே

 உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி

மின்னும் சிலையே

அன்னை போல் வரவா நானும் சோருட்ட

உண்ணாதிருந்தால் இங்கே யார்

 வருவார் உன்னை சீராட்ட

சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே

 பாரு எனை பாரு

நெஞ்சில் பாரம்  கண்ணில் ஈரம் துடைப்பார்

 யாரு பதில் கூறு

உள்ளம் தோறும் கள்ளம் நூறு

 அதை நீ பார்த்து எடை போடு

உன்னை காக்க தொல்லை தீர்க்க வருவோம்

 நாங்கள் துணிவோடு

வானத்தோடு கோவம் கொண்டு

 நீ போவதேன் பால் நிலாவே

மானம்  காக்க நாங்கள் உண்டு

 நீ நம்பியே பார் நிலாவே

தேவ கன்னியே ,

தேய்வதென்ன  நீ தன்னாலே

ர்ஜுனன் செல்லும்வரை கண்மூடி படுத்திருந்தாள் ஜானகி ... அவன் சென்றதும் மெல்ல தன் செல்போனை தேடி எடுத்தவள் மீண்டும் ஸ்ரீராமின் புகைப்படத்தை திறந்தாள்.

" ராம் .. என்ன நடக்குது  ராம் என்னை சுத்தி ... ? ஒரு வேளை ரகு யாரோ ஒருத்தரா இருந்திருந்தா இந்நேரம் நான் கோபபட்டு சண்டை போட்டுருப்பேன் .. ஆனா நான் ரகுவுக்கு ப்ரண்டா இருந்தேனே ராம்.... ரகு யாரோ  ஒரு பெண்ணை எப்படி உருகி உருகி விரும்புறார்னு நெனச்சேனே ராம் ... கடைசியில் அது நான்தானா ?

இதெல்லாம் கேக்கனும்னு தான் என்னை விட்டுட்டு போனிங்களா ராம் ? இன்னும் எத்தனை பேரை நான் கஸ்டபடுத்த போறேனோ ? நான் என்ன பண்ணுவேன் ?

நீங்க சொல்லுங்க ராம் ? நான் இப்போ என்ன பண்ணனும் ... எப்பவும் என் தலையில் தட்டி இது அப்படி  இல்ல இப்படின்னு சின்ன சின்ன விஷயத்தை கூட சொல்லி தருவிங்களே ராம் ? இப்போ நான் என்ன  பண்ணனும்னு புரியாமல் இருக்கேனே ?

அர்ஜுன் மாமா சொல்றமாதிரி, விலகி போனா மட்டும் ரகு மனசு மாறுவாரா ? என்னாலே உங்களை மறக்க முடியாத மாதிரி தானே அவராலும் என்னை மறக்க முடியாமல் இருக்கும் ? நான் எப்பவும் கூட இருந்து ஹெல்ப் பண்றேன்னு நேத்து சொன்னேனே ... இப்போ நானே குழம்பி போயி இருக்கேனே ... எனக்கு பதில் சொல்லுங்க ராம் .. நீங்கதான் எனக்கு பதில் சொல்லணும்... பதில் சொல்லியே ஆகணும் "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.