(Reading time: 7 - 14 minutes)

 

"வேண்டாம்டி!இப்படிலாம் வெட்கம் பட்டின்னா,நான் சும்மா இருக்க மாட்டேன்.எதாவது, பண்ணிடுவேன்."

"போடா!"

"போடி!ப்ளீஸ்...ஒரே ஒரு முறை."

"மாட்டேன்."

"ப்ளீஸ்..."

"முடியாது!"

"சரி..போ!"-அவன்,வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டான்.

"என்னங்க?"-அவன் முறைத்தான்.

"ஆதி..."

"என்னவாம் ஆதிக்கு?"

"கோபமா?"

"ஆமா..."

"கோபம் குறைய என்ன பண்ணலாம்?"

"ஒண்ணும் பண்ண வேணாம்."-அவள்,அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

"என்னது இது?"

"ஏன்?"

"இது பத்தாது..."

"பின்ன?"

"அதுலாம்..."-அவன்,அவளை இழுத்து அவள் இதழில் இதழ் பதித்தான்.நெடு நேர போராட்டத்திற்கு பின்,அவனிடம் இருந்து விடுதலை பெற்றாள் மது.

"இப்படி இருக்கணும்."

"போ!ஆத!நான் கிளம்புறேன்."

"தனியா விட்டுட்டு போற?"

"கூட ராகுலை வேணும்னா விட்டுட்டு போறேன்."

"கிராதகி...ராட்ஸஸி!"

"பேசாம தூங்கு..."

"ம்..." -அவள் அவன் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு சென்றாள்.

ப்படியே கட்டிலில் சாய்ந்தான் சரண்.மனதில்,

அழுந்தி இருந்த ஏதோ ஒன்று இலகி லேசானது. அது வரையில் வாழ்வில் தனியாக அமைந்த பயணம்.இனி,இரு துணையுடன் அமைய போகிறது அல்லவா???

இனி,அன்பான கணவனாய்,அரவணைக்கும் தந்தையாய்...அவன் கடமையை ஆற்ற போகிறான்.அதற்கு முதலில்,நண்பனாய் அவன் பணியை செய்து முடிக்க வேண்டும்.

அது முடியும் வரை எந்த சலனமும் மனதில் இருக்க கூடாது.

"அப்பா?"-சிந்தனை கலைந்தான் சரண்.

"என்னடா?செல்லம்?"

"தூக்கம் வருதுப்பா!"-கண்களை கசக்கி கொண்டு நின்றான் ராகுல்.

"வாடா கண்ணா!"-ராகுல்,சரண் அருகில் வந்தான்.

"சாப்பிட்டியா?"

"ம்...சாப்பிட்டேன்பா!"

"சரி...வா!"-அந்நேரத்தில் சரண் ராகுலுக்கு தாயானான்.ராகுலை அணைத்து கொண்டு உறங்கினான்.சிறிது நேரம்,கழித்து மது எட்டி பார்த்தாள்.இருவரும் உறங்கிவிட்டிருந்தனர். அமைதியாக அவர்கள் அருகே வந்து,போர்த்திவிட்டு இருவர் நெற்றியிலும் முத்தமிட்டுவிட்டு சென்றாள்.

தொடரும்...

Go to EUU # 20

Go to EUU # 22

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.