"யா பைன்"
"ம்ம்ம் ஓகே நீங்க கண்டினியு பண்ணுங்க நான் மேனேஜர் பாத்துட்டு வந்துடறேன்"
"ம்ம்ம் ஓகே"
மதுவிற்கு தன் கண் முன் நடக்கும் எதையும் நம்ப முடியவில்லை.
"இதெல்லாம் உண்மையா இதற்காக தான் அன்று நான் சென்னை வந்த போது பார்க்க கூட வரவில்லையா? அப்போ இது உனக்கு முன்னாடியே தெரியும் என்கிட்ட விளையாடிருக்க.. இரு நானும் விளையாடறேன்" மனதோடு பேசி கொண்டவள் வேலையில் மூழ்கி போனாள்.
இருவரும் ஒருவரோடு ஒருவர் விளையாட விதி இருவருடனும் விளையாட ஆயுத்தமானது.
வந்த ஒரு வாரத்திலேயே ஆதி அனுபவம் தந்த உதவியால் எல்லாவற்றையும் கற்று கொண்டான், மதுவும் நல்ல முறையில் கற்று கொண்டாள் இருப்பினும் அனுபவமின்மை தெரிந்தது.
Related Read: Mischievous Chillu - Episode 04 - Chillu in a jealous mood!
சிறு சிறு தவறுகள் செய்தாலும் உடனே சரி செய்யவும் அவள் கற்றுகொண்டதால் மெனெஜரிடமும் எந்த திட்டும் வாங்காமல் ஒழுங்காக இருக்க முடிந்தது.
அவர்களின் காதல் வாழ்கையும் கூட தினமும் காலை மதியம் மாலை என 'கேபே' 'கேண்டீன்' என வளர்ந்து ஒன்றாக சென்று ஒன்றாக வரும் அளவு பெருகியிருந்தது.
இரண்டு மாதங்கள் கடந்திருந்தது...
ப்ரொஜெக்டில் நல்ல முன்னேற்றம்.. ஆனால் இருவரின் காதலில் அந்த அளவு முன்னேற்றம் இல்லை எனினும் அவர்கள் உணர முடியாமல், உணர்த்தாமல் அது கண்ணாமூச்சி ஆடிய போதும் இருவரும் அருகருகே இருப்பதை விரும்பினர். மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அன்று மாலை கடற்கரையில் அமர்ந்து மதுவை பற்றிய யோசனையில் ஆழ்ந்திருந்தான். அவளை முதன் முதலில் எந்த சண்டையும் இல்லாமல் இதே கடற் கரையில் சந்தித்தது ஞாபகம் வந்தது. அப்போது அவளிடம் இருந்த குறும்பு இப்போது இல்லை என நினைத்து கொண்டான்.
அந்த சந்திப்பில் அவள் அவனை ஒருமையில் அழைத்தது கூட நினைவு வந்தது.
(அப்படி என்ன சந்திப்பு நு கேட்கறிங்கள? ரெண்டாவது அத்தியாயத்துல ஆதி மதுவை நினைத்து பார்க்கிற மாதிரி ஒரு சீன் இருக்கே அதே தான்)
அலைகள் எழுந்து எழுந்து அடங்குவது போல் நெஞ்சில் அவள் நினைவுகளும் ஒவ்வொன்றாய் எழுந்து மறைய அந்த தாகத்துடன் வீடு சென்றான் ஆதி. அன்றைய இரவு ரம்யமனதாய் இருந்தது. என்றும் இல்லாத அளவு எதுவோ ஒன்று ஆடி வைக்க முதன் முறையாய் இது காதல் தானோ என யோசித்தவன், ஆனந்த பரிதவிப்பில் உறங்கி போனான்.
மதுவின் வீட்டிலோ, திவாக்கர் ஒரு வரனை பற்றி பேச்செடுக்க, தீர்கமாக மறுத்து விட்டு, தன்னறையில் அடைந்து சிந்திதவளுக்கு அகம் எங்கும் அவன் முகம் தான்!!! ஆதியிடம் தான் கொண்டிருக்கும் நேசம் காதல் தான் என்று உறுதியாகி விட்டது.
இருவருமே அடுத்த நாள் காலை முதல் பரபரப்பாக தயாரனனர். தன் உளம் கவர்ந்த தன் இணையை காதல் தான் என்று அறிந்தவுடன் பார்க்க போகும் தவிப்பு.
சீக்கிரமே அலுவலகம் வந்து அவனுக்காக மது காத்திருக்க, பக்கத்துக்கு டீமிற்கு புதிதாக வந்து ஜாயின் பண்ணியிருந்த ஒருவன் ஸ்வீட் பாக்சுடன் இவளிடம் வந்தான். வசுந்தராவும் கேண்டீன் வரை சென்றிருக்க, இவள் மட்டும் தனியே அவள் பார்டிசனில் இருந்தாள்.
"ஹலோ"
"ஹாய்"
"ஐயம் பிரகாஷ், புதுசா ஜாயின் பண்ணிருக்கேன்.. ஸ்வீட் எடுத்துகோங்க"
"ஒ தேங்க்ஸ், ஐயம் மதுமிதா"
"நைஸ் நேம்"
"தேங்க்ஸ்"
"நீங்க பிரெஷரா?"
"ம்ம்ம் எஸ், நீங்க?"
"நான் டெல்லி ஆபீஸ் ல இவ்வளவு நாள் இருந்தேன், நேடிவ் சென்னை சோ இப்போ டிரன்ஸ்பர் கிடைச்ச உடனே மாறிட்டேன்"
"ஒ ஓகே"
"உங்க மேனேஜர் யாரு?"
"சத்யநாதன் சார்"
"ஒ எனக்கும் அவர் தான்"
"ஹ்ம்ம் ஓகே மது நைஸ் டு மீட் யு"
பிரகாஷ் கைகளை குலுக்க அவளிடம் வலக்கரம் நீட்ட, அதை பற்றியவன் அவள் மெல்லிய கரங்களின் ஸ்பரிசத்தை உணர்ந்த நொடி அவனுள் ஏதோ மாற்றம்.மீண்டும் ஒரு முறை அவளை பார்த்தான்,
"யூ லுக் வெரி பியுடிபுள் மது"
"தேங்க்ஸ்" என சிரித்து விட்டு கைகளை விளக்கி கொண்டாள் மது.
அவனும் அவன் இடத்திற்கு சென்று விட்டான்.
ஆனால் மனது முழுக்க கனவுகளுடன் வந்த ஆதி கண்டது கைகளை பிடித்து கொண்டு குலைந்து பேசி கொண்டிருந்த மதுவையும் அந்த புதியவனையும் தான்!!!! சினம் தலைகேற மதுவிடம் சென்றான்!!
காதல் பெருகும்…
{kunena_discuss:725}