குழல் எத்தனை முறை சொல்றது உனக்கு? வைஷ்ணவி னு கூப்பிடு அவளை!
போடா வாத்து! எனக்கு அவளை ஷாஜியா தான் தெரியும்! பெயரில் என்ன டா இருக்கு? ஷாஜித்தாவோ வைஷ்ணவியோ அவள் குணம் மாறவில்லையே?! பெயர் மாற்றத்தினால் குணம் மாறப்போகுதா? என்னை பொறுத்த வரை அவ திருமதி ஷாஜித்தா ராமசந்திரன் தான். ரிஜிஸ்டர் ஆப்பிஸ் ல அப்படி தானே கையெழுத்துப் போட்டா? நானும் பக்கதுல தானே இருந்தேன். உனக்கு அவ வைஷ்ணவி ராமசந்திரன்! அவ்வளவு தானே!
ஆக இவங்களுக்கும் நீ தான் திருமணம் செய்து வைத்ததா?' என்றான் பிரபு.
ஆமாம். பாஸ் பின்னே வேற யாரு செய்து வைப்பா? எங்களுக்கு மிகவும் நெருங்கிய தோழி இவளும் மகாவும் தான்!....
…
உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?!
சந்திரா.. உனக்கு நியாபகம் இருக்கானு தெரியலை... கடைசியா நாம பஸ்ல சந்திச்சோமே...
ஆமா அப்போக்கூட ஒரு அங்கிள் ஸ்ட்ரோக் அட்டாக் அகி... நீ, நான், மேடி அங்கிள் கூட்டிபோய் ஹாஸ்ப்பிடல்ல சேர்த்தோமே...?
பரவாயில்லை..நியாபகம் வெச்சிருக்க! அங்கிள் இப்போ நல்லா இருக்கார்.. அவரோட மகன் தான் இவர்..'என்று பிரபுவை கை காட்டினாள் குழலீ!
சந்திரனுக்கு சந்தோஷம் என்றால் பிரபு அதிர்ந்து நின்றான்! மாலதியோ 'நீங்க தானா மா? கடவுள் மாதிரி சரியான நேரத்தில் உதவி செய்தீங்கனு சொன்னாங்க! அந்த நன்றியை எப்படி சொல்வதுனு யோசித்தேன்... கடைசியில் என் மருமகளா...' என்று நெகிழ்ந்து அவள் கையை பற்றிக்கொண்டார்!
அதற்கு பின்னர் புறப்பட்டு குழலீ, சங்கவை இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு வீடு சென்று படுத்தவன் அதுவரை யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் ஆழ்ந்த சிந்தனையிலேயே இருந்தான். முதல்முறையாக 'குழலீயை தவறாய் புரிந்துக்கொண்டேனோ' என்ற எண்ணம் தோன்றியது!
மனதின் ஆழத்தில் புற அழகை தாண்டி மனத்தின் அக அழகை பார்க்க தொடங்கியிவன்... ஏதோ எண்ணம் தோன்ற திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான்... குழப்பத்துடன்!
'நானா??? இருக்காது! எனக்கு அவளை பிடிக்கவில்லை' என்று வாய்விட்டுச் சொன்னவனை மனது கேலி செய்தது...'உண்மைதானே!! உனக்கு பூங்குழலீயை பிடிச்சிருக்குனு வாய்விட்டு ஒத்துகிட்டா என்னவாம்?'
ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவன்… விடியும் வரை உறக்கமும் வரவில்லை... எந்த தெளிவும் வரவில்லை!