“யோசிக்க எதுவுமே இல்லை நந்தினி, மூணு வாரம் என் கூட வீட்டுக்கு வா... ஷ்யாம் வீட்டிலேயே ஆபிஸ் இருக்கு, ஸோ நான் அங்கே இருந்து ரெஸ்ட் எடுக்க முடியாது... இங்கே நான் மட்டும் இருந்தா போர் அடிக்கும்... வா நந்தினி....” என்றாள்.
வள்ளி நந்தினியை கவனித்தாள்...
நந்தினியின் முகபாவம் அனாமிகா சொன்னது அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை காட்டியது.
அவளுடைய வீட்டில் கூட நந்தினியை தங்க சொல்லலாம்... ஆனால்.... யோசனையுடன் மீண்டும் எஸ் பக்கம் பார்த்தாள்...
அவன் இப்போதும் நந்தினி பக்கமே கண்களை வைத்திருந்தான்.
பரவாயில்லையே பையன் வழிக்கு வருகிறான் போலிருக்கிறதே.... இன்னுமொரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம்... ஆனால் இந்த முறை நந்தினியின் மனதை காயப் படுத்த ... டு கிளம்பினாள்...
சம்மர் முடிந்து ஃபால் தொடங்கி இருந்ததால், ஏழு மணிக்கே இருள் பரவ தொடங்கி இருந்தது...
அனாமிகா வந்து விட்டாளா தெரியவில்லையே... போன் செய்து கேட்கலாமா என்று அவள் யோசித்த போதே, பார்க்கிங்கில் இருந்த ஒரு காரின் ஹெட்லைட் உயிர் பெற்றது...
அனாமிகா தானோ?
This story is now available on Chillzee KiMo.
...