அவளின் அப்பா இறந்த பின்பு சரஸ்வதி பொழுதுபோக்குகிற்கு என்று பெரிதாக நேரம் செலவிடுவதில்லை... அவளின் உலகமே அவர்கள் மூவரும் தான்... முதலில் இவர்களின் பள்ளி படிப்பு, பின் கல்லூரி படிப்பு என்றே நாட்கள் ஓடி போயிருந்தது....
அம்மா விரும்பி படம் பார்ப்பது, அதுவும் கருத்தை பகிர்ந்துக் கொண்டு படம் பார்ப்பதை இப்போது தான் பார்க்கிறாள்...
படம் முடிந்து எஸ் கிளம்ப இரவு பதினொன்றுக்கு மேல் ஆனது... சரஸ்வதி மற்றும் விஜயாவிடம் செல்லம் கொஞ்சி, ராகவனிடம் பிரியாவிடை பெற்று, நந்தினியிடம் கண்களால் பேசி, ஒருவழியாக கிளம்பினான் அவன்....
மறுதினம் அவன் மீண்டும் காலையில் வந்து நின்றபோது, அவள் ஆச்சர்யப் படவில்லை... அதற்காக சந்தோஷப் படவுமில்லை...
...
This story is now available on Chillzee KiMo.
...
enathe" href="/stories/tamil-thodarkathai-all-list/5206-kanavugal-mattum-enathe-enathu-13" rel="alternate">Episode # 13
{kunena_discuss:868}