06. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு
சாய்வு நாற்காலியில் அமர்ந்து தன் மனைவி பாக்கியத்தின் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் வக்கீல் விஸ்வநாதன்.
‘பாக்யா நீ ரொம்ப புண்ணியம் செஞ்சவ. அதான் நடக்கிறது எதையும் கண்ணால் பார்க்காம தப்பிச்சு போயிட்டே. ஆனால் நம்ம புள்ள கஷ்டப்படறத பார்க்கும்போது என்னால தாங்க முடியலை.’
கண்ணீரை துடைத்துக்கொண்டார்.
அந்த வசீகரன் ஜெயிலில் இருந்து வெளியில் வந்துட்டானாம். வந்தவன் சும்மா இல்லாம சக்தியை போய் பார்க்க முயற்சி பண்ணியிருக்கான். அதை சுஜயாவால் தாங்க முடியலை.
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வந்திருந்தது. பள்ளிக்கு செல்லும் முன்பும் பள்ளிக்கு சென்று வந்த பிறகும் அவள் பாக்கியத்துடனே நேரத்தை செலவிட்டாள். அவர்களுக்கு தேவையான சமையலை செய்வதிலிருந்து பாக்கியத்திற்கு தேவையான பணிவிடைகளை செய்வது வரைக்கும் செய்து அவர்களை தனது பாசத்தில் நெகிழ்த்தினாள். விஸ்வநாதன் கூட தடுத்துப் பார்த்தார்.