“என்ன உளர்றே? பேசாம போ.”
“நான் யாருன்னு தெரிஞ்சா நீ கொடுக்கிற மரியாதையே வேறா இருக்கும். நான் உன் முதலாளியோட குழந்தைக்கு அப்பா. இப்ப புரியுதா?” ருத்ரதேவனின் கன்னத்தில் தட்டிவிட்டு சென்றுவிட்டான்.
‘இன்னிக்கு கொடுத்த ஷாக் போதும். எப்படியும் என்கிட்டதானே வரனும்.’ மனதுள் நினைத்தவாறே சென்றான்.
ருத்ரதேவனோ குழம்பி நின்றான்.
‘அவங்க குழந்தையோட அப்பான்னா இந்த ஆளுதான் சுஜயாவோட கணவனா? ஏன் அவனிடம் இருந்து அவங்களை காப்பாற்றுவதற்காக அந்த விஸ்வநாதன் என்னைக் கூப்பிட்டார்.’
அவன் குழம்பினான்.
“என்ன தம்பி ஒரே குழப்பமா இருக்கா?” அங்கே கிளார்க்காக வேலை செய்யும் மாரியப்பன் கேட்டான். எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் அவனே தொடர்ந்து பேச ஆரம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளிகள் பேசும் . . .