அண்ணா ஒரு நிமிஷம் ..மனோ முகமே சரியில்லை .. எனக்கு ஆதி மேல நம்பிக்கை இல்ல உங்களை அண்ணன்னு என் மனசார கூப்பிட்டு தொலைச்சுட்டேன் ...அவளுக்கு யாரும் இல்லைன்னு மட்டும் நினைக்காதீங்க ......அன்னிக்கு கேட்டீங்க இல்லை அவ எந்த நிலைமைல இருந்தாலும் நீ ஏத்துப்பியான்னு...? இப்ப சொல்றேன் அவ எந்த நிலைமைல எப்படி என்கிட்டே வந்தாலும் சரி நான் அவளுக்காக காத்துட்டு இருப்பேன் ...ஆனா யாரும் இல்லாதவன்னு அவன் பணத்திமிர காட்டி அவள ஏமாத்த மட்டும் நினச்சிருந்தான் ...தன் விரல் நீட்டி சங்கரை எச்சரித்து விட்டு சென்றுவிட்டான் விநாயக் மூர்த்தி அவன் கட்டிய கோட்டையெல்லாம் ஒரே நொடியில் தவிடு பொடியான வேதனையில்….
என்ன ஆச்சு இவருக்கு ..? என்று குழம்பிய வண்ணம் இருந்தாள் டாக்டர் உமா. அவளை ப
...
This story is now available on Chillzee KiMo.
...
தன்னிடம் சொல்லியிருக்க வேண்டுமே….அவன் நினைத்த நொடி அவன் கால்கள் ஆதியின் அறை வாசலில் நின்றன...
அங்கே மெத்தையில் ஆதி ஒருபுறம் அமர்ந்திருக்க மறுபுறம் மனோ அழுது கொண்டிருக்க சங்கர் கோபத்துடன் ஆதி உன்கிட்ட பேசணும் பக்கத்து ரூம்ல இருக்கேன் வா என்றழைத்தான்.
ஆதி அமைதியாய் சென்றான்.