"என்னை கல்யாணம் பண்ணிக்கறயா?... நிஜமா தான் கேக்கறேன்.. உன்னை முதல் நாள் பார்த்ததிலிருந்தே ஏதோ ஒரு அட்டிராக்ஷன்... ஏதோ உன்னோட ஜென்ம ஜென்மமாய் பேசி பழகின மாதிரி தோணித்து.. ஆனா நீ அஜய்யோட வந்ததாலே ஒரு சின்ன சந்தேகம்.. அவனும் நீயும் லவர்ஸோன்னு.. கேக்க தயக்கமா இருந்துது.. இன்ஃபேக்ட் நான் என் தங்கைகாக அவனை கேக்கலாம்னு கூட நினைச்சேன்.. ஆனா அவ வேற யாரையோ லவ் பண்ணறா தோணறது.. இன்னும் சரியா விவரம் தெரியலை.. கடைசியில் அஜைக்கு கல்யாணம் திடீர்னு ஆனவுடனே.. சரி ஏன் நாம கேக்கக் கூடாதுன்னு நினைச்சேன்.. கேட்டுட்டேன்..", என்று பேசியவனை ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல் பார்த்தாள் பைரவி.
"ஆனந்த் என்ன இது.. பேசணும்னு கூப்பிடுட்டு ப்ரபோஸ் பண்ணறேள்?.. சில்லி.."
"என்ன சில்லி... என் மனசுலே உன்னை பார்த்ததும் ஒரு ஃபீலிங்க்.. உன்னை பிடிச்சிருக்கு.. லவ் பண்ணறேன் அப்படி இப்படின்னு உளறி உன்னை சுத்தி வந்து டைம் பாஸ் பண்ணப் பிடிக்கலை.. அதான் டைரக்ட் அப்ரோச்சா நேரே கேட்டுட்டேன்.. சொல்லு.. உனக்கு என்னை பிடிச்சிருக்கா??”.
“யெஸ்னா நான் பெரியவா கிட்ட சொல்லி முறைப்படி உன் பேரண்ட்ஸ் கிட்ட பேசறேன்.. இல்லைன்னா.. என்னோட லக் அவ்வளவுதான்னு நினைச்சுக்கறேன்.. ஆனா.. உடனே வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிப்பேனான்னு தெரியலை", என்று கூறி அவள் முகத்தை பார்த்தான்.
"ஆனந்த் என் மனசுலே இப்போ கல்யாண ஆசையெல்லாம் இல்லை.. அதையெல்லாம் விட ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கு எனக்கு.. அதிலிருந்து என் கவனம் சிதறிப் போவதை நான் விரும்பலை.. மத்தபடி உங்க மேல எந்த வித அபிப்ராயமும் எனக்கு இதுவரை இல்லை.. இனிமேல் வருமான்னும் தெரியாது.. என் லைஃப் அமெரிக்காவில்.. நீங்களோ இங்கே இந்தியாவில்.. இன்னமும் பத்து நாளில் நான் ஊர் திரும்பனும்னு இருக்கேன். சோ இந்த நிலையில் எனக்கு எந்த வித டிஸ்டிராக்ஷனும் தேவை இல்லை. ப்ளீஸ்..", என்று தன் மறுப்பை நாசூக்காய் வெளிப்படுத்தினாள்.
"நோ ன்னு நேரடியாய் சொல்லாம சொல்லறியா.. பரவாயில்லை.. நிச்சயம் எனக்கு வருத்தம் தான்.. ஆனாலும்.. நீ கம்ப்லீட்டா ரிஜெக்ட் பண்ணலைங்கற சந்தோஷம் இருக்கு..மே பீ..எனக்கும் ஒரு சான்ஸ் இருக்குன்னு நினைக்கிறேன்... சோ ஐ ஆம் ஹோப்பிங்க் ஃபார் தெ பெஸ்ட்.. சரி.. வா போகலாம் உன்னை நான் டிராப் செய்கிறேன்", என்று கூறி அவளுடன் நடக்கத் தொடங்கினான் ஆனந்த்.
தொடரும்
{kunena_discuss:909}