விருட்டென்று செய்தித்தாளை மடித்தவன் ஆமா கரக்ட் விநாயக் அடுத்தவன் பொண்டாட்டிய கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கிறான் பாரு அவன விட மானங்கெட்ட ஆம்பிள்ளை யாருமே இல்லை ...புருஷன விட்டுட்டு வந்துடுவான்னு யோசிக்கிறான் பாரு அவன் சத்தியமா ஆம்பளையே இல்லை ... என்றான் ஆதி
ஒரு பொண்ண அவ சூழ்நிலைய காட்டி படிய வெக்கிறான் பாரு அவன் ஆம்பளையே இல்லை ... என்றான் விநாயக்
அந்த சூழ்நிலை என்னன்னு புரிஞ்சிக்காம வந்து குட்டைய குழப்புறான் பாரு அவன்……
ஒரு பொண்ணு கிட்ட பலவந்தமா தன்னோட வீரத்த காட்டுறான் பாரு……
அது பலவந்தம்ன்னு முட்டாள் தனமா யோசிச்சிட்டு வந்து பஞ்சாயத்து வெக்கிறான் பாரு……
பணத்த காட்டி எதையும் நியாயப்படுத்திடலாம்ன்னு நினைக்குறான் பாரு……
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆதிக்கு “ஏய் எத்தன தடவ சொல்லியிருக்கேன் இப்படி தேவை இல்லாம கண்டவங்க கிட்ட இளிக்காதன்னு..இப்ப இவன்ட்ட இளிச்சு என்ன சாதிக்க போற ... ?” விநாயக்கை கடிந்து துப்ப முடியவில்லை அவனால் அதற்கும் மனோ தான் கிடைத்தாள் அவனுக்கு ...
பேசி முடிக்கவில்லை அவன் கன்னத்தில் ஓங்கி அரைந்து இருந்தாள் மனோ ...